என் மலர்
நீங்கள் தேடியது "OpenAI"
- ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருந்து வருகிறது
- கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட்பாட் எனப்படும் உரையாடல் மென்பொருளை உருவாக்குவதில் நாளுக்கு நாள் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே போட்டி வலுத்து வருகிறது.
ஐ.டி. துறையில் சேவை மேலாண்மை அனுபவத்தை மேம்படுத்த சாட்பாட்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருக்கும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது.
இணையத்தில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை கொண்டு இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம் 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' எனப்படும் ஒரு மென்பொருள் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனை கொண்டு உருவாக்கப்படும் செயலிகள்தான் சாட்பாட்கள்.
ஆனால் சாட்ஜிபிடி மற்றும் பார்ட் இரண்டும் தனியுரிமை வகையை சேர்ந்தவை. இவற்றை இலவசமாக பயன்படுத்த முடியாது. இதில் உள்ள புரோகிராமிங் குறியீடுகளை கணினி ஆராய்ச்சியாளர்கள் பார்க்கவோ பரிசீலனை செய்யவோ அனுமதி கிடையாது.
இந்நிலையில் முகநூல் வலைதளத்தை நடத்தி வரும் மெட்டா நிறுவனம் நேரடியாக ஒரு சாட்பாட்டை உருவாக்காமல் அதற்கு பதிலாக லாமா எனும் ஒரு 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' வடிவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை காப்புரிமை கட்டுப்பாடில்லாத, பயன்படுத்த அனுமதி தேவைப்படாத, கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத இலவச ஓபன் ஸோர்ஸ் எனப்படும் வகையில் கொண்டு வந்திருக்கிறது.
இதனைக் கொண்டு ஆராய்ச்சியாளர்களும் கணினி நிறுவனங்களும் இலவசமாக பதிவிறக்கி, பரிசீலித்து, பின்பு தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றங்களுடன் கட்டமைத்து புதிது புதிதாக பல சாட்பாட்களை உருவாக்க முடியும்.
ஆர்வலர்களும் நிபுணர்களும் லாமா மொழி மாதிரியை கொண்டு பல புதுமைகளையும் உருவாக்க முடியும்.
ஒரு செயலியை வடிவமைக்க உருவாக்கும் மென்பொருள் பரிசீலிக்கப்படும் வகையில் இருந்தால், தரவுகளின் பாதுகாப்பை வலுவாக்கவும், எதிர்கால செயலாக்க குறைபாடுகளையும், சிக்கல்களையும் முதலிலேயே கண்டறியவும் முடியும்.
தற்போது பிரபலமாக இருக்கும் சாட்பாட்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சாட்பாட்களின் உரையாடல்கள் பல நேரங்களில் திசை திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.
உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மென்பொருள் நிபுணர்கள் இலவச பெரு மொழி மாதிரிகளை கொண்டு எண்ணற்ற சாட்பாட்களை உருவாக்க முடியும் என்பதால் லாமாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.
- அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டு உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலியை, சென்ற வருட இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தி பெரும் வெற்றியடைந்து பிரபலமாகியுள்ளது ஓபன்ஏஐ (OpenAI) மென்பொருள் நிறுவனம். இதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன்.
இந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (Federal Trade Commission) ஒரு விரிவான விசாரணையை துவங்கியுள்ளது.
மக்களின் தனிப்பட்ட பெயர் மற்றும் தரவுகளை அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் விதத்தில் ஓபன்ஏஐ பயன்படுத்துவதாக கூறப்படுவதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அந்நிறுவனம் மீறுகிறதா என்பதை எஃப்.டி.சி. ஆய்வு செய்கிறது.
மிக அதிக எண்ணிக்கையிலான மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அவற்றை செயற்கை நுண்ணறிவின் மூலம் தேவைப்படும் விதத்தில் பாகுபடுத்தி சாட்ஜிபிடி உருவாக்கப்பட்டது. மாதிரிகள் (samples) சேகரிப்பினால் எழக்கூடிய அபாயங்களை எப்படி அந்நிறுவனம் சரி செய்கிறது என்பது பற்றிய பதிவுகளை தெரிவிக்கும்படி 20-பக்க கோரிக்கையை எஃப்.டி.சி. அனுப்பியிருக்கிறது.
அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பெருமளவு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட இருப்பதால் அது குறித்த கொள்கையை வரையறுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை வரையறைகள் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஆரம்ப வெற்றியானது சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களிடையே இதை விட சிறப்பான ஒரு செயலியை உருவாக்க ஒரு போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது. செயற்கை நுண்ணறிவுக்கான ஒழுங்குமுறை பற்றிய விவாதங்களில் சாம் ஆல்ட்மேன், ஒரு செல்வாக்கு மிக்க நபராக உருவெடுத்திருக்கிறார். அமெரிக்காவில் எம்.பி.க்கள் மட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடனும் நெருக்கமானவராக இருக்கிறார்.
இந்நிலையில் அவர் நிறுவனம் எஃப்.டி.சியின் மூலம் ஒரு புதிய சோதனையை எதிர்கொள்கிறது.
ஏற்கனவே இருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று எஃப்.டி.சி. பலமுறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஒரு நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறுவதாக எஃப்.டி.சி. கண்டறிந்தால், அது அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் அல்லது அந்நிறுவனம் அதன் தரவை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஆணையிடலாம்.
எஃப்.டி.சி.யின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபன்ஏஐ, "முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" என மட்டும் கூறியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாக கூறி மெட்டா, அமேசான் மற்றும் ட்விட்டருக்கு எதிராக எஃப்.டி.சி. பெரும் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது
- கூகுள் நிறுவனமும் டீப்மைண்ட் செயலியை உருவாக்கியுள்ளது
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது'ஓபன் ஏஐ' எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. கூகுள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 'டீப்மைண்ட்'ஐ உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், நேற்று எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார்.
'ஏஐ' குறித்து பலமுறை எச்சரித்துள்ள மஸ்க், அதனை "மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டிருந்தார். அதை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது "பேயை வரவழைப்பது போன்றது" என்றும் கூறியிருந்தார்.
தற்போது 'எக்ஸ்ஏஐ' நிறுவனத்தை குறித்து மஸ்க், "சாட்ஜிபிடி அரசியல் ரீதியாக சார்புநிலை கொண்ட பொறுப்பற்றது. ஆனால் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் குறிக்கோள் பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையை புரிந்துகொள்வதுடன் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு பதிலளிப்பதுமாகும்" என கூறியிருக்கிறார்.
இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஏஐ (AI) என்பது தொற்றுநோய் மற்றும் அணுஆயுத போருக்கு இணையான ஆபத்து என்று எச்சரித்தவரும், பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் 'ஏஐ' பாதுகாப்பு மையத்தை வழிநடத்துபவருமான டான் ஹென்ட்ரிக்ஸ் எக்ஸ்ஏஐ குழுவிற்கு ஆலோசனைகள் வழங்குகிறார்.
2015-ல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மஸ்க், கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் விரைவாக செயல்படுத்த துடிக்கும் வகையில் பொறுப்பற்று செயல்படுவதாக கூறியிருந்தார். பின்னர், டெஸ்லாவில் கவனம் செலுத்துவதற்காக 2018-ல் ஓப்பன்ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் "ட்ரூத்ஜிபிடி" (TruthGPT) எனும் புதிய செயலிக்கான தனது திட்டங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்ட மஸ்க், "மக்களுக்கு 3-வதாக செயலியை உருவாக்குவேன் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஏஐ-ல் என்விடியா (Nvidia) எனும் கலிபோர்னியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஜிபியு (GPU) எனப்படும் மிகவும் விலையுயர்ந்த ஸெமிகண்டக்டர்கள் மிக அவசியம்.
ஓபன்ஏஐ அல்லது கூகுள் டீப்மைண்ட் போன்ற ஒரு ஏஐ நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதற்கு பெரிதும் அவை தேவைப்படுவதால் மஸ்க்கின் இந்த ஏஐ ஆர்வத்தை மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் ஒரு முயற்சியாக மென்பொருள் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
- வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறது.
ஓபன்ஏஐ நிறுவனம் அதன் மென்பொருள் தொழில்நுட்ப செயலியின் உருவாக்கத்திற்காக, இணையத்திலிருந்து, "டேட்டா ஸ்கிரேப்பிங்" (Data Scraping) என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வழிமுறையை கையாண்டு, எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
கோடிக்கணக்கான இணைய பயனர்களின் சமூக ஊடக கருத்துகள், வலைப்பதிவு இடுகைகள், விக்கிபீடியா வலைதளத்தின் கட்டுரைகள் மற்றும் குடும்ப சமையல் குறிப்புகள் போன்ற எண்ணற்ற தகவல்களை ஓபன்ஏஐ பயன்படுத்தும் போது அவர்களின் உரிமைகளை அது தன்னிச்சையாக மீறியிருக்கிறதா, இல்லையா என்கின்ற ஒரு புதிய கோட்பாட்டை இந்த வழக்கு பரிசோதிக்க முயல்கிறது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வழக்கின் பின்னணியில் உள்ள சட்ட நிறுவனமான கிளார்க்சன், தரவு மீறல்கள் முதல் தவறான விளம்பரம் வரையிலான பிரச்சனைகளில் பெரிய குழுவின் சார்பாக வழக்கு தாக்கல் செய்வதில் அனுபவமிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான ரியான் கிளார்க்சன் கூறும்போது, "அதிக சக்தி வாய்ந்த இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, தங்களின் தகவல்கள் திருடப்பட்டவர்கள் மற்றும் வணிக ரீதியாக தங்கள் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இவ்வழக்கில் பிரதிநிதித்துவம் கிடைத்திட எங்கள் நிறுவனம் விரும்புகிறது" என்றார்.
மேலும், "வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வார்த்தைகளுக்கு உண்மையான உரிமையாளர்கள், வலைதளங்களில் தங்கள் பதிவுகளை வெளியிடும் நபர்கள்தான். அவர்களில் எவரும் இத்தகைய ஒரு நிறுவனம் தங்கள் லாபத்திற்காக இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கவில்லை" என ரியான் கூறியிருக்கிறார்.
குறுகிய காலங்களிலேயே மிகவும் பிரபலமடைந்து விட்ட இந்த நிறுவனத்திற்கெதிரான இந்த வழக்கின் போக்கை தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
- புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
- வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியில் சின்க் செய்யப்படுகிறது.
ஒபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலியை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் பிரபல ஏஐ சாட்பாட் சேவையை முன்பை விட எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி செயலி அதன் வெப் வெர்ஷன் சாட் ஹிஸ்ட்ரியை சின்க் செய்து வழங்குகிறது.
மேலும் ஒபன் ஏஐ நிறுவனத்தின் ஒபன்-சோர்ஸ் ஸ்பீச் ரெகஃனிஷன் மாடலான (Speech Recognition Model) விஸ்பர் மூலம் ஐஒஎஸ் ஆப் வாய்ஸ் இன்புட் வசதியை வழங்குகிறது. பயனர்கள் வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியிலும் சின்க் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெப் வெர்ஷனில் இருந்த சாட்கள் செயலியிலும் பார்க்க முடியும்.

சாட்ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்கள் ஐஒஎஸ் செயலியில் பிரத்யேக பலன்களை பெற முடியும். இதில் ஜிபிடி-4 மேம்பட்ட திறன்கள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி, அதிவேகமாக பதில்களை பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சாட்ஜிபிடி செயலி உடனடி தீர்வுகள் மட்டுமின்றி, அறிவுரை, தொழில்முறை கருத்துக்கள் என்று பல்வித கேள்விகளுக்கு நேர்த்தியாக பதில் அளிக்கிறது.
புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் இந்த செயலி கிடைக்கிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வெளியிடப்பட இருக்கிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷன் செயலியும் விரைவில் வெளியிடப்படும் என்று ஒபன்ஏஐ தெரிவித்துள்ளது.
- ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது.
- திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து 200 டாலர்கள் வழங்கப்படுகிறது.
உலகளவில் பெரும் பேசுபொருளாகி இருக்கும் சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சிஸ்டம்களில் பிழையை கண்டறிவோருக்கு 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16.4 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது சேவையில் பிழையை கண்டறிவோருக்கு, இதுபோன்ற தொகை வழங்குவதை பக் பவுண்டி (Bug Bounty) திட்டம் என்ற பெயரில் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
அந்த வரிசையில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து குறைந்த பட்சமாக 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 412 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பக்-கிரவுட் என்ற பக் பவுண்டி பிளாட்ஃபார்மில், ஒபன்ஏஐ நிறுவனம் ஆராய்ச்சியாளர்கள் சாட்ஜிபிடி சேவையில் ஆய்வு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் சாட்ஜிபிடி செயல்பாடு, ஒபன்ஏஐ சிஸ்டம்கள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்து, மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல்களை பரிமாறி கொள்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
தனியுரிமை விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில் இத்தாலி நாட்டில் சாட்ஜிபிடி சேவைக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் ஜெனரேடிவ் ஏஐ சேவைகளை சம்பந்தப்பட்ட ஆணையங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.