search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sam Altman"

    • அந்த காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.
    • எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும்?

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உலகின் விலை உயர்ந்த ஹைப்பர் கார் மாடல்களில் ஒன்றை ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் படி ஆல்ட்மேன் கோனிக்செக் ரெகரா ஹைப்பர் கார் மாடலை ஓட்டுகிறார்.

    இது லிமிட்டெட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோனிக்செக் ரெகரா உலகளவில் மொத்தம் 80 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இது ஒரு ஹைப்ரிட் ரக கார் ஆகும். இதன் ஆரம்ப விலையே 1.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.

    இந்த காரை பயன்படுத்திய நிலையில் வாங்கும் போது விலை மேலும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில், இதன் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 25 கோடி ஆகும்.

    ஓபன்ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ரெகரா மாடலை ஓட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் 40 லட்சத்திற்கும் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியால் எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்த எக்ஸ் தள பதிவு ஒன்றில், "ஓபன்ஏஐ சிஇஓ உலகின் விலை உயர்ந்த காரை ஓட்டி வருகிறார். லாப நோக்கற்ற நிறுவனமாக துவங்கப்பட்ட ஓபன்ஏஐ எப்படி லாபகர வியாபாரமாக மாறியது?" என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் "நல்ல கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.


    முன்னதாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கவும், அதில் அதிக கவனம் செலுத்துவதிலும் எலான் மஸ்க் தீவிரம் காட்டினர். இதன் விளைவாக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ஓபன்ஏஐ. பிறகு, அந்நிறுவன நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் இதர காரணங்களால் எலான் மஸ்க் ஓபன்ஏஐ-இல் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.
    • 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

    மும்பை:

    'ஆர்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய வெர்சன்கள் இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது.

    ஆரம்பத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் நாளடைவில் மருத்துவம், சினிமா, சேவை என பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்பமான சாட்ஜி பிடி ஓபன் ஏ.ஐ. நிறுவனத் தால் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சாட்ஜிபிடி-4 வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தைய சாட்ஜிபிடி வெர்சனை விட கூடுதல் அம்சங்களை கொண்டிருந்தது. இதனால் சாட்ஜிபிடி-4 வெர்சனுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

    இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் 13-ந் தேதி அன்று தங்களது புதிய வெர்சனான சாட்ஜிபிடி-4 ஓ-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

    இது மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் மற்றும் பேசும் மொழியை பின் நேரத்தில் மொழி பெயர்க்கவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.

    சாட்ஜிபிடி-4ஓ-ல் 25 ஆயிரம் வார்த்தைகள் வரை கேட்க முடியும். அல்லது டாக்மெண்ட் பைல்களை பதிவேற்றம் செய்வதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.

    மேலும் ஒரு படத்தை அப்லோடு செய்தும் கேள்விகளை கேட்கலாம். சாட்ஜிபிடியின் பழைய பதிப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே புரிந்து கொள்ளும் போது, சாட்ஜிபிடி4-ல் 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

    சாட்ஜிபி–டியின் புதிய வெர்சனான ஜிபிடி-4 ஓ இதுவரை வெளிவந்த வெர்சன்களில் அதிநவீனமாக இருப்பதுடன் மனிதர் களை போலவே பதில் அளிக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகில் இதுவரை கிடைத்திடாத சாட்ஜிபிடி வெர்சன்களில் சிறந்த மாடலை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

    ஓபன் ஏஐ 3.5 வெர்சன் வரை பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கிற நிலையில் இந்நிறுவனம் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச சேவையை அளிக்கும் என ஆல்ட்மேன் உறுதியளித்து உள்ளார்.

    இதுவரை உரையாடல்கள் வழியாக பதில் அளித்த சாட்ஜிபிடி குரல் மற்றும் காணொலி உள்ளிடு களுக்கு பதில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சினிமாக்களில் வரும் செயற்கை நுண்ணறிவு போல் உண்மைக்கு நெருக்கமாக செயல்படுவதும் இன்னும் அதிக நுண்ணறிவுடனும், நகைச்சுவை உணர்வுடனும் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த புதிய வெர்சனால் சில இடையூறுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

    ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் சிலரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியான நிலையில் இந்த புதிய வெர்சனால் மேலும் இடையூறுகள் ஏற்படலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் ஜிபிடி-4ஓ பழைய மாடலை விட 2 மடங்கு வேகமானது மற்றும் கணிசமான செயல்திறன் கொண்டது. இதன் மூலம் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடுதல், சாட்போட்டுடன் பேசுதல் மற்றும் பல்வேறு குரல்களில் பதில்களை கேட்பது ஆகியவை இதில் அடங்கும் என அந்நிறுவனத்தின் அதிகாரி மீரா மிராட்டி தெரிவித்துள்ளார்.

    • ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை திருமணம் செய்து கொண்டார்.
    • திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஹவாயில் நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவர் முல்ஹெரின் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

    தற்போது, சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார்.

    • ஒபன்ஏஐ நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
    • முன்னதாக ஒபன்ஏஐ சி.இ.ஒ.-வாக ட்விட்ச் நிறுவனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வெளியாகும் அறிவிப்புகள் டெக் உலகில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஐந்து நாட்களில் ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இன்று (நவம்பர் 22) மீண்டும் அந்நிறுவனத்தின் சி.இ.ஒ.-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றது குறித்து அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாம் ஆல்ட்மேனும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து பதிவிட்டு இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஒபன்ஏஐ நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை வரவேற்கிறோம். நிலையான, நன்கு விவரம் அறிந்த மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு இது முதல்படி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒபன்ஏஐ தலைமை பொறுப்பை ஏற்று, அதன் குறிக்கோளை அடைவதற்கு தலைமை பொறுப்பில் இருந்து முக்கிய பங்காற்றுவது குறித்து சாம், கிரெக் மற்றும் நானும் பேச்சுவார்த்தை நடத்தினோம்."

    "உறுதியான கூட்டணியை உருவாக்கி, அடுத்த தலைமுறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மதிப்புகளை எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

    • டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

    உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஒபன்ஏஐ, கடந்த வெள்ளிக் கிழமை (நவம்பர் 17) அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஒபன்ஏஐ நிர்வாக குழுவின் இந்த முடிவு டெக் உலகையே அதிர்ச்சி அடைய செய்தது.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புக்கு டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே பணிநீக்க நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    அந்த வகையில், கடந்த ஞாயிற்று கிழமை வரையிலும் நிர்வாக குழு ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்த நடவடிக்கையில் உறுதியாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர ஒபன்ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு நெருங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் நிர்வாக குழுவின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

    அதில், சாம் ஆல்ட்மேனின் பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால், அனைவரும் சாம் ஆல்ட்மேனுடன் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்து கையொப்பமிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க நிர்வாக குழு ஒப்புக்கொள்வதாக நேற்று (நவம்பர் 21) தகவல்கள் வெளியாகின.

    "பிரெட் டெய்லர், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோர் அடங்கிய நிர்வாக குழு ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரும்புவதற்கான ஒப்பந்தத்தை எட்டியிருக்கிறோம். இது தொடர்பான விவரங்களை சேகரிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்தமைக்கு நன்றிகள்," என ஒபன்ஏஐ நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    "நான் ஒபன்ஏஐ-ஐ விரும்புகிறேன். இந்த குழு மற்றும் அதன் குறிக்கோளை ஒன்றாக வைத்துக் கொள்ள கடந்த சில நாட்களில் அனைத்தையும் செய்தேன். புதிய நிர்வாக குழு மற்றும் சத்யாவின் ஆதரவுடன், நான் ஒபன்ஏஐ-க்கு திரும்புவதில் ஆவலாக இருக்கிறேன். இத்துடன் மைக்ரோசாப்ட் உடன் பலமான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்," என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக ட்விட்ச் நிறுவனர் எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டார். தற்போது, ஒபன்ஏஐ தனது பழைய தலைமை செயல் அதிகாரியை மீண்டும் அழைத்துக் கொண்டிருப்பதால், எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டது குறித்து ஒபன்ஏஐ சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம்.
    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் கருத்து மோதல்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. இவர் ஒபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி கொண்டே வருகிறது. இவரை ஒபன்ஏஐ நிறுவனம் எதற்காக திடீரென பணிநீக்கம் செய்தது என்ற காரணம் தொர்ந்து மர்மமாகவே உள்ளது.

    பணிநீக்கம் செய்யப்பட்டதும் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கருத்து தெரிவித்து இருந்தார். இவர் மட்டுமின்றி டெக் உலகின் முன்னணி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் சாம் ஆல்ட்மேன் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், "மேம்பட்ட, அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் ரிஸ்க் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக குழு இத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணத்தை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருந்தார். எனினும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். மேலும் நிறுவனத்தில் தனது பங்குகள் அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சேவைகளை அவசர அவசரமாக தயார் செய்து வெளியிட்டன.
    • தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிப்பு.

    தொழில்நுட்ப உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒபன்ஏஐ. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சேவை டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுபட துவங்கின. முன்னணி டெக் பிராண்டுகள் ஏற்கனவே உருவாக்கி வந்த சேவைகளை அவசர அவசரமாகவும் தயார் செய்து வெளியிட்டன.

    இந்த நிலையில், தொழில்நுட்ப உலகையே அதிரச் செய்யும் அறிவிப்பு ஒன்றை ஒபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதோடு ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் தெளிவற்ற நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அதன் தலைமை செயல் அதிகாரி குறித்து இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பதும், திடீரென பதவியில் இருந்து விடுவிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒபன்ஏஐ நிர்வாக குழு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தை ஆல்ட்மேன் செய்திருக்க வேண்டும், அல்லது ஆல்ட்மேன் மற்றும் நிர்வாக குழு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். 

    ×