search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.. அவங்க எதையோ மறைக்குறாங்க.. எலான் மஸ்க் கருத்தால் புது குழப்பம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.. அவங்க எதையோ மறைக்குறாங்க.. எலான் மஸ்க் கருத்தால் புது குழப்பம்

    • மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம்.
    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் கருத்து மோதல்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. இவர் ஒபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி கொண்டே வருகிறது. இவரை ஒபன்ஏஐ நிறுவனம் எதற்காக திடீரென பணிநீக்கம் செய்தது என்ற காரணம் தொர்ந்து மர்மமாகவே உள்ளது.

    பணிநீக்கம் செய்யப்பட்டதும் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கருத்து தெரிவித்து இருந்தார். இவர் மட்டுமின்றி டெக் உலகின் முன்னணி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் சாம் ஆல்ட்மேன் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், "மேம்பட்ட, அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் ரிஸ்க் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக குழு இத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணத்தை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருந்தார். எனினும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். மேலும் நிறுவனத்தில் தனது பங்குகள் அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×