search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tim Cook"

    • ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஸ்டூடியோ மாடல் புதிய சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை 2023 WWDC நிகழ்வில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட புதிய வெர்ஷன் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் அல்லது M2 அல்ட்ரா சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய மேக் ஸ்டூடியோ M2 மேக்ஸ் வெர்ஷன் முதல் தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை விட 50 சதவீதமும், 27 இன்ச் ஐமேக் மாடலை விட நான்கு மடங்கு அதிவேகமானது ஆகும். M2 மேக்ஸ்-ஐ விட அதீத செயல்திறன் வழங்கும் வகையில் தான் M2 அல்ட்ரா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட M1 அல்ட்ரா மாடலை விட அதிகபட்சம் மூன்று மடங்கு வேகமானது ஆகும். இது டாப் எண்ட் 27 இன்ச் இண்டெல் ஐமேக் மாடலை விட ஆறு மடங்கு வேகமாக இயங்குகிறது. புதிய மேக் ஸ்டூடியோ விலை 1999 டாலர்கள் என்று துவங்குகிறது.

    • மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.
    • புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023), முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 15.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் 8-கோர் சிபியு மற்றும் 10-கோர் ஜிபியு கொண்ட M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டச் ஐடி, மேஜிக் கீபோர்டு மற்றும் 18 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.

    6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரிடிசைன் செய்யப்பட்ட 13 இன்ச் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இத்துடன் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலும் முந்தைய வெர்ஷனை போன்றே மிட்நைட், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1299 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாக இருக்கிறது.
    • ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.

    டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து, வாடிக்கையாளர்களை வரவேற்றார். டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் இந்த விற்பனையகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆப்பிள் ஸ்டோர் டெல்லியின் பல்வேறு கேட்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    சகெட் ஸ்டோர் என்று அழைக்கப்படும் டெல்லி ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிகேசி ஸ்டோரை விட அளவில் சற்றே சிறியதாக இருக்கிறது. மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாகவே இருக்கிறது. இதற்கான வாடகையாக ஸ்டோரின் மொத்த விற்பனையில் ஒரு பகுதி அல்லது மாதம் ரூ. 40 லட்சம் என்று எந்த தொகை அதிகமாக இருக்கிறதோ அதனை ஆப்பிள் நிறுவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

     

    சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் ஆப்பிள் சாதனங்கள் குறித்த செயல்முறை விளக்கம் பெற்று, முழு தகவல்களை அறிந்துள்ளனர். நாட்டின் 18 மாநிலங்களை சேர்த்து, இவர்கள் அனைவரும் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசும் திறன் கொண்டுள்ளனர்.

    முன்னதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்தார்.

    2016 வாக்கில் இந்தியாவுக்கு வந்திருந்த டிம் குக் ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையங்களை திறந்து வைக்க டிம் குக் இந்தியா வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் நாட்டின் முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை மும்பையில் டிம் குக் திறந்து வைத்தார்.

    • ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
    • முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ டிம் குக் சந்தித்தார்.

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படுவதை ஒட்டி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியின் 'தொழில்நுட்பத்தில் சாதகமான தாக்கம்' என்ற நோக்கத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    "சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய சாதகமான தாக்கம் என்ற உங்களின் கனவை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கல்வியில் துவங்கி, டெவலப்பர்கள் முதல் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் வரை , நாங்கள் நாடு முழுக்க வளர்ச்சி பெறவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று டிம் குக் தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

    "உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்தது மற்றும் இந்தியாவில் அரங்கேறி வரும் தொழில்நுட்பம் சார்ந்த பரிமாற்றங்கள் குறித்து பேசியதும் மகிழ்ச்சியாக உள்ளது," என்று டிம் குக் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ சந்தித்தார்.

    சமீபத்தில் தான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டது. மும்பை விற்பனை மையத்தை திறந்து வைத்த டிம் குக் சில நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை கடைக்குள் வரவேற்றார்.

    இதே போன்று டெல்லி விற்பனை மையத்திற்கும் டிம் குக் வாடிக்கையாளர்களை வரவேற்பார் என கூறப்படுகிறது. டெல்லியின் செலக்ட் சிட்டி மாலில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது விற்பனை மையம் நாளை திறக்கப்பட இருக்கிறது. 

    • ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது.
    • இதில், ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியாவில் தனது பொருட்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.


    ஏ.ஆர்.ரகுமான் -டிம் குக்

    ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.


    டிம் குக் -சூரஜ் நம்பியார் -மவுனி ராய்

    இதையடுத்து இந்த திறப்பு விழாவையொட்டி நேற்று திரைப்பிரபலங்கள் பலர் இந்த நிறுவனத்தை பார்வையிட்டனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் மாதுரி தீட்சித், மவுனி ராய், தயாரிப்பாளர் போனி கபூர், பாடகர் அர்மன் மாலிக் என பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
    • டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் தனது சாதனங்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் இந்தியாவில் திறக்கப்பட இருப்பதை அறிந்து பலர் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முன்பே அங்கு கூடியிருந்தனர். ஆப்பிள் பிகேசியை திறந்து வைத்த டிம் குக் சுமார் ஏழு நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை ஸ்டோருக்கு வரவேற்றார்.

     

    ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

    மும்பையை தொடர்ந்து டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் சில்லறை விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய விற்பனை மையம் ஆப்பிள் சகெட் என்று அழைக்கப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
    • இத்துடன் டிம் குக் பகிர்ந்து இருந்த புகைப்படம் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்த செய்தி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தற்போது டிம் குக் வாழ்த்து சொல்ல பயன்படுத்திய புகைப்படம் இந்தியாவின் மும்பையை சேர்ந்த புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்தது என தெரியவந்துள்ளது.

    இது குறித்து டிம் குக் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "இந்த படம் ஒளி திருநாள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் எப்படி இருக்கும் என்பதை கச்சிதமாக பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கிறது," என குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் புகைப்படத்தில் ஷாட் ஆன் ஐபோன் எனும் வாசகம் இடம்பெற்று உள்ளது.

    டிம் குக் பகிர்ந்த புகைப்படத்தை அபெக்‌ஷா மகர் என்ற புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்து இருக்கிறார். தனது புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பதை பார்த்த அபெக்‌ஷா மகர் டிம் குக்கின் ட்விட்டர் பதிவில் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

    அதில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது ஷாட் ஆன் ஐபோன் புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பது எனக்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்," என அபெக்‌ஷா மகர் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ஐபோனில் எப்படி சிறப்பான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற தகவல்களையும் அபெக்‌ஷா மகர் தெரிவித்து இருக்கிறார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் சேவையில் பிழை கண்டறிந்த 14 வயது சிறுவனின் கல்விக்கு உதவி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் செயலியில் பயனர் விவரங்களை ஒட்டுக்கேட்கும் பிழை கடந்த வாரம் கண்டறியப்பட்டது. பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டதும் ஃபேஸ்டைமில் வீடியோ காலிங் வசதி நிறுத்தப்பட்டு, பிழையை சரி செய்வதற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், பிழையை சரிசெய்வதற்கான அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்துடன் பிழையை கண்டறிந்த சிறுவனின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. மேலும் தாம்ப்சன் மற்றும் டேவென் மோரிஸ் குடும்பத்தாருக்கு ஆப்பிள் நன்றி தெரிவித்துள்ளது.

    க்ரூப் ஃபேஸ்டைம் கோளாறு முதலில் அரிசோனாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கண்டறிந்தான். ஜனவரி 19 ஆம் தேதி தனது நண்பருக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது அவரது நண்பர் அழைப்பை ஏற்கவில்லை எனினும் அவரது உரையாடல்களை கேட்க முடிந்ததாக தெரிவித்தார்.



    பின் சிறுவனின் தாயார் மிஷல் தாம்ப்சன் பாதுகாப்பு கோளாறு பற்றி ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். பின் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வேகமாக பரவியது. ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஓ.எஸ். மோஜேவ் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தில் குறைபாடு ஏற்பட்டது.

    பிழை சரி செய்யப்பட்டது மட்டுமின்றி ஃபேஸ்டைம் சேவை முழைமையாக சோதனை செய்யப்பட்டு அதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மென்பொருள் பிழை சார்ந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விதத்தை மாற்ற இருப்பதாக ஆப்பிள் கடந்த வாரம் அறிவித்தது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். #Apple #TimCook
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, உலகம் முழுக்க விற்பனை  செய்யப்படுகிறது. 

    அறிமுகமானது முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலக்கட்டங்களில் புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு, தனது வருவாய் லாப கணிப்பை முதல் முறையாக குறைத்துள்ளது.

    ஐபோன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

    இந்நிலையில் ஐபோன் விற்பனை சரிவை தொடர்ந்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-



    ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்திருக்கிறது.

    காலாண்டில் வருவாய் கணிப்பு குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வணிகம் மூலம்  வரலாற்று சிறப்புமிக்க வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    இதேபோன்று ஐபோன் ஆக்டிவேஷன்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.



    புதிய ஐபோன்களின் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. முதல் காலாண்டில் ஐபோன் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    வெளிப்புற சூழல் நமக்கு அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த நிலை மாறும் வரை நாம் காத்திருக்கவும் கூடாது. இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த காலாண்டு விற்பனை பற்றி விவாதிக்க ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் தனது கடிதத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
    ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததையொட்டி, அந்நிறுவன ஊழியர்களுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடிதம் எழுதியிருக்கிறார். #TimCook


    உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் கோடி) கடந்ததற்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

    புதிய மைல்கல் சாதனையையொட்டி ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் எழுதியிருக்கும் கடிதத்தில்,

    “இன்று ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்துள்ளது. வியாழக்கிழமை பங்குச் சந்தை நிறைவின் போது ஆப்பிள் பங்குகளின் விலை 207.39 டாலர்களாக இருந்தது, அதன்படி ஆப்பிள் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. நாம் பெருமை கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன, இது நம் வெற்றியின் மிக முக்கிய அங்கம் கிடையாது. ஆப்பிள் நிறுவன புதுமை, நம் சாதனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை, நம் மதிப்புகளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதற்கான வெளிப்பாடாக நிதிநிலை அறிக்கைகள் இருக்கின்றன.”

    “மிகப்பெரும் சவால்களையும் மனித ஆற்றலின் திறன் மூலம் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தான் ஸ்டீவ் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார். உலகை மாற்ற வித்தியாசமாக நினைப்பவர்களே அவற்றை செய்து முடிக்கின்றனர். இன்றைய உலகில், நம் இலக்கு இதுவரை இருந்ததில், மிகமுக்கியமான ஒன்று ஆகும். நம் சாதனங்கள் சுவாரஸ்யம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

    இதுபோன்ற சூழ்நிலைகளில் ஸ்டீவ் செய்ததை போன்றே, நாம் ஆப்பிள் நிறுவனத்தின் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கில், நமது பணியை ஒன்றிணைந்து சிறப்பாக செய்ய வேண்டும்.”

    இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #TimCook #Appletrillion
    ஆப்பிள் நிறுவன பங்குகள் 207.05 டாலர்கள் அளவில் அதகரித்ததைத் தொடர்ந்து ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Appletrillion


    ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு முதல் முறையாக ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. 

    கடந்த பத்து ஆண்டுகளில் ஐபோன் விற்பனை மூலம் இத்தகைய இலக்கை எட்டியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பங்குகள் 2.8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்களில் நிறைவுற்றது. அந்நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆப்பிள் பங்குகள் அதிகரிக்க துவங்கின.

    அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒரு லட்சம் கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,87,05,50,00,00,000.00) மதிப்பிடப்பட்ட முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. 

    2007-ம் ஆண்டு முதல் ஐபோன் விற்பனை துவங்கிய போது, ஆப்பிள் நிறுவன பங்குகள் சுமார் 1,100% அதிகரித்தது. கடந்த ஆண்டு மும்மடங்கு அதிகரித்தது. 1980-ம் ஆண்டு பங்குச் சந்தையில் இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 50,000% அதிகரித்து இருக்கிறது.



    1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் காரேஜில் துவங்கிய ஆப்பிள் நிறுவனம், துவக்க காலத்தில் தனது மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரபலமாக அறியப்பட்டது. அதன் பின் ஆப்பிள் ஐபோன்கள் அந்நிறுவன பொருளாதாரத்தை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011-ம் ஆண்டு மரணித்ததைத் தொடர்ந்து டிம் குக் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று நிறுவனத்தின் லாபத்தை இருமடங்கு அதிகரிக்க செய்தார். 2006-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் 2000 கோடி டாலர்கள் வருவாயும், லாபமாக 200 கோடி டாலர்களை பெற்றது.

    கடந்த ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவன விற்பனை 11 மடங்கு 22,900 கோடி டாலர்களாக அதிகரித்து, இதன் மொத்த வருவாய் இருமடங்கு அதிகரித்து 4840 கோடி டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பொது வெளியில் அறிவிக்கப்பட்ட, அமெரிக்காவின் அதிக லாபம் பெறும் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. #Appletrillion #Apple
    ×