என் மலர்
நீங்கள் தேடியது "Tim Cook"
- ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஸ்டூடியோ மாடல் புதிய சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை 2023 WWDC நிகழ்வில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட புதிய வெர்ஷன் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் அல்லது M2 அல்ட்ரா சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய மேக் ஸ்டூடியோ M2 மேக்ஸ் வெர்ஷன் முதல் தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை விட 50 சதவீதமும், 27 இன்ச் ஐமேக் மாடலை விட நான்கு மடங்கு அதிவேகமானது ஆகும். M2 மேக்ஸ்-ஐ விட அதீத செயல்திறன் வழங்கும் வகையில் தான் M2 அல்ட்ரா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட M1 அல்ட்ரா மாடலை விட அதிகபட்சம் மூன்று மடங்கு வேகமானது ஆகும். இது டாப் எண்ட் 27 இன்ச் இண்டெல் ஐமேக் மாடலை விட ஆறு மடங்கு வேகமாக இயங்குகிறது. புதிய மேக் ஸ்டூடியோ விலை 1999 டாலர்கள் என்று துவங்குகிறது.
- மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.
- புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023), முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 15.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் 8-கோர் சிபியு மற்றும் 10-கோர் ஜிபியு கொண்ட M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டச் ஐடி, மேஜிக் கீபோர்டு மற்றும் 18 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.

6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரிடிசைன் செய்யப்பட்ட 13 இன்ச் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
இத்துடன் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலும் முந்தைய வெர்ஷனை போன்றே மிட்நைட், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1299 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாக இருக்கிறது.
- ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து, வாடிக்கையாளர்களை வரவேற்றார். டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் இந்த விற்பனையகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆப்பிள் ஸ்டோர் டெல்லியின் பல்வேறு கேட்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
சகெட் ஸ்டோர் என்று அழைக்கப்படும் டெல்லி ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிகேசி ஸ்டோரை விட அளவில் சற்றே சிறியதாக இருக்கிறது. மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாகவே இருக்கிறது. இதற்கான வாடகையாக ஸ்டோரின் மொத்த விற்பனையில் ஒரு பகுதி அல்லது மாதம் ரூ. 40 லட்சம் என்று எந்த தொகை அதிகமாக இருக்கிறதோ அதனை ஆப்பிள் நிறுவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் ஆப்பிள் சாதனங்கள் குறித்த செயல்முறை விளக்கம் பெற்று, முழு தகவல்களை அறிந்துள்ளனர். நாட்டின் 18 மாநிலங்களை சேர்த்து, இவர்கள் அனைவரும் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசும் திறன் கொண்டுள்ளனர்.
முன்னதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்தார்.
2016 வாக்கில் இந்தியாவுக்கு வந்திருந்த டிம் குக் ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையங்களை திறந்து வைக்க டிம் குக் இந்தியா வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் நாட்டின் முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை மும்பையில் டிம் குக் திறந்து வைத்தார்.
- ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
- முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ டிம் குக் சந்தித்தார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படுவதை ஒட்டி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியின் 'தொழில்நுட்பத்தில் சாதகமான தாக்கம்' என்ற நோக்கத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய சாதகமான தாக்கம் என்ற உங்களின் கனவை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கல்வியில் துவங்கி, டெவலப்பர்கள் முதல் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் வரை , நாங்கள் நாடு முழுக்க வளர்ச்சி பெறவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று டிம் குக் தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
"உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்தது மற்றும் இந்தியாவில் அரங்கேறி வரும் தொழில்நுட்பம் சார்ந்த பரிமாற்றங்கள் குறித்து பேசியதும் மகிழ்ச்சியாக உள்ளது," என்று டிம் குக் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ சந்தித்தார்.
சமீபத்தில் தான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டது. மும்பை விற்பனை மையத்தை திறந்து வைத்த டிம் குக் சில நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை கடைக்குள் வரவேற்றார்.
இதே போன்று டெல்லி விற்பனை மையத்திற்கும் டிம் குக் வாடிக்கையாளர்களை வரவேற்பார் என கூறப்படுகிறது. டெல்லியின் செலக்ட் சிட்டி மாலில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது விற்பனை மையம் நாளை திறக்கப்பட இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது.
- இதில், ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் தனது பொருட்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

ஏ.ஆர்.ரகுமான் -டிம் குக்
ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

டிம் குக் -சூரஜ் நம்பியார் -மவுனி ராய்
இதையடுத்து இந்த திறப்பு விழாவையொட்டி நேற்று திரைப்பிரபலங்கள் பலர் இந்த நிறுவனத்தை பார்வையிட்டனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் மாதுரி தீட்சித், மவுனி ராய், தயாரிப்பாளர் போனி கபூர், பாடகர் அர்மன் மாலிக் என பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
- டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் தனது சாதனங்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் இந்தியாவில் திறக்கப்பட இருப்பதை அறிந்து பலர் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முன்பே அங்கு கூடியிருந்தனர். ஆப்பிள் பிகேசியை திறந்து வைத்த டிம் குக் சுமார் ஏழு நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை ஸ்டோருக்கு வரவேற்றார்.

ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
மும்பையை தொடர்ந்து டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் சில்லறை விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய விற்பனை மையம் ஆப்பிள் சகெட் என்று அழைக்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
- இத்துடன் டிம் குக் பகிர்ந்து இருந்த புகைப்படம் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்த செய்தி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தற்போது டிம் குக் வாழ்த்து சொல்ல பயன்படுத்திய புகைப்படம் இந்தியாவின் மும்பையை சேர்ந்த புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்தது என தெரியவந்துள்ளது.
இது குறித்து டிம் குக் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "இந்த படம் ஒளி திருநாள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் எப்படி இருக்கும் என்பதை கச்சிதமாக பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கிறது," என குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் புகைப்படத்தில் ஷாட் ஆன் ஐபோன் எனும் வாசகம் இடம்பெற்று உள்ளது.

டிம் குக் பகிர்ந்த புகைப்படத்தை அபெக்ஷா மகர் என்ற புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்து இருக்கிறார். தனது புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பதை பார்த்த அபெக்ஷா மகர் டிம் குக்கின் ட்விட்டர் பதிவில் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது ஷாட் ஆன் ஐபோன் புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பது எனக்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்," என அபெக்ஷா மகர் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ஐபோனில் எப்படி சிறப்பான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற தகவல்களையும் அபெக்ஷா மகர் தெரிவித்து இருக்கிறார்.


