என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசபக்தி"

    • இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
    • சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.

    இந்தியா பாகிஸ்தான் மோதலை அடுத்து பலர் தங்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்தனர்.

    மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற சொல் "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி பாக் என்று சொல் இருக்கும் மற்ற பிற வார்த்தைகளையும் நெட்டிசன்கள் பெயர் மாற்றி அழைத்து வருகின்றனர்.

    உதாரணமாக பாக்டீரியா - ஸ்ரீடீரியா, பாக்யராஜ் - ஸ்ரீக்யராஜ், நிஜாம் பாக்கு - நிஜாம் ஸ்ரீ, சேப்பாக்கம் - சேஸ்ரீ, பாக்குறேன் - ஸ்ரீகுறேன், சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.

    கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார்.
    • "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது.

    பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை நாட்டு மக்களிடம் தேசிய உணர்வை கிளர்த்தியுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் மீதான மக்களின் கோபம் பல்வேறு வகையில் வெளிப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக, மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற பின்னொட்டு "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


    ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார். மற்றொரு பயனர், "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது என்று தெரிவித்தார்.

    இதன் பொருள் "இனிப்பு சுவையூட்டி ". இது இந்தி வார்த்தையான "paag" மற்றும் சமஸ்கிருத வார்த்தையான "pagva" ஆகியவற்றுடன் வேர்களைப் பகிர்ந்து கொள்கிறது என்று அந்த பயனர் தெரிவித்தார். 

    பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்புபவர்களுக்கு பதில் அளித்த சிவசேனா, தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல என குறிப்பிட்டுள்ளது. #Patriotism #Patriotismmonopoly #ShivSena
    மும்பை:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி சமீபத்தில் பேரணி ஒன்றில் ராணுவத்தினர் அணியும் சீருடையுடன் கலந்து கொண்டார். இதை குறிவைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டி வருகின்றன. ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடி வருவதாக எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.

    இந்நிலையில்,  தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல என சிவசேனா கட்சி குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.

    விமானப்படையினர் நடத்திய தாக்குதல் என்பது அவர்களின் பணியின் ஒரு பகுதியாகும். யாரும் இட்ட வேலையை செய்வதற்காக அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தலைகணக்கு கேட்பவர்களும், தாக்குதலுக்கு உரிமை கோரும் வகையில் ராணுவ சீருடையில் ஊர்வலமாக செல்பவர்களும் சரிசமமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

    இதுதொடர்பாக கேள்வி எழுப்புபவர்கள் அரசியல் எதிரிகள் என்பதால் அவர்களின் கருத்துரிமையை தேசத்துரோகம் என்று யாரும் கூற முடியாது.

    புல்வாமா தாக்குதலில் இருந்து நமது வீரர்களின் உயிர்களை பாதுகாக்க நாம் அடிப்படையில் தவறி விட்டோம். ஆனால், பல மாதங்கள் சிரமப்பட்டு, பயிற்சி பெற்ற பின்னர் ராணுவ வீரர்கள் அணியும் சீருடையில் சிலர் அரசியல் ஊர்வலம் நடத்துகின்றனர்.



    தேர்தல் கமிஷனே நேரடியாக தலையிட்டு இதுபோல் செய்ய கூடாது என எச்சரிக்கும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. தேசபக்தி என்பது எந்த ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட ஏகபோக உரிமையும் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Patriotism #Patriotismmonopoly #ShivSena
    ×