என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்விக் கட்டணம்"

    • மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார்.
    • படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் அதிராபாத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக பாலியல் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்த தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களின் கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டனர். மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க முடியாததால், பெற்றோர் மொபைல் செயலி மூலம் தங்கள் இருவரின் அந்தரங்க காட்சிகளை ஒளிபரப்பி பணம் ஈட்டியுள்ளனர்.

    சிறுமிகளின் தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருப்பதால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். வீடியோவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்தக் காட்சிகளைப் படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்தனர். உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் வீடு சோதனை செய்யப்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி முகத்தை மூடி அமர்ந்துள்ளனர்
    • பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    உ.பியில் ஸ்கூல் ஃபீஸ் கட்டாத 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொளுத்தும் வெயிலில் அமர வைத்து பிரின்சிபல் வீடியோ எடுத்துள்ளார். ஃபீஸ் கட்டவில்லை என்றால் இதுதான் நிலைமை என்று உணர்த்தும் வகையில் அந்த வீடியோவை அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாரத்நகரில் இயங்கி வரும் சியாம்ராஜி தனியார் பள்ளியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி தங்களது முகத்தை மூடி அமர்ந்திருக்கும்போது பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

    மேலும் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்களை இந்த முறை மன்னிப்பேன் என்றும் ஆனால் இனிமேலும் கட்டவில்லை என்றால் அவர்கள் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் வீடியோ மூலம் பெற்றோர்களுக்கு அந்த பிரின்சிபல் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ×