என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuition fees"

    • மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார்.
    • படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் அதிராபாத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக பாலியல் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்த தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களின் கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டனர். மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க முடியாததால், பெற்றோர் மொபைல் செயலி மூலம் தங்கள் இருவரின் அந்தரங்க காட்சிகளை ஒளிபரப்பி பணம் ஈட்டியுள்ளனர்.

    சிறுமிகளின் தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருப்பதால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். வீடியோவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்தக் காட்சிகளைப் படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்தனர். உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் வீடு சோதனை செய்யப்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மாணவர், பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தல்
    • தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 650 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு ஒதுக்கீடாக நடப்பாண்டில் 239 மருத்துவ இடங்களை பெற்றுள்ளோம்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உயர் கல்வி கட்டண குழு தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கந்தமாளை சந்தித்து புதுவை மாணவர்,பெற்றோர் நல சங்க தலைவர் வை.பாலா வாழ்த்து தெரிவித்தார்.

    அவரிடம் அவர் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2022,2023 -ம் கல்வியாண்டில் உயர்கல்வி கட்டணக் குழுவால் இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) படிப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயி க்கப்பட்ட கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மட்டும். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 65 விழுக்காடு இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 விழுக்காடு இடங்களும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கு பெறப்பட்டது. புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 650 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு ஒதுக்கீடாக நடப்பாண்டில் 239 மருத்துவ இடங்களை பெற்றுள்ளோம்.இது 35 விழுக்காடு ஆகும்.

    மேலும் புதுவை அரசு மருத்துவக் கல்லூரியான இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் மொத்தம் உள்ள 180 எம்.பி.பி.எஸ் இடங்களில் புதுவை அரசு ஒதுக்கீடாக 131 இடங்கள் பெறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 370 இடங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.

    தற்போது புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடாக 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் அறிவிக்க ப்பட்டுள்ளது. மேலும் இந்திராகாந்தி மருத்து வக்க ல்லூரி கூட்டுறவுத்து றையின் கீழ் செயல்ப டுவதால் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் ரூ. 1 லட்சத்து40 ஆயிரம் எனவும், 2,3, மற்றும் 4-ம் ஆண்டுகளுக்கு ரூ. 74 ஆயிரம் என ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    புதுவையில் பிற்படுத்த ப்பட்ட, மிகவும் பிற்படுத்த ப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துத் தரவேண்டும் கட்டணத்தை அதிக அளவில் உயர்த்த கூடாது என புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலசங்கம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழை குழந்தைகளை கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி.
    • மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும். நிர்வாகங்களின் மிரட்டலுக்கு பணிந்து கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை.

    இதை கண்காணிக்க வேண்டிய மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், பள்ளி களின் கட்டணக் கொள்ளை யைத் தடுக்க முடியவில்லை. இதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்தாலும் கூட, கட்டணம் செலுத்த வழி இல்லாததால் அந்த இடத்தில் சேர முடியாத நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசிடம் முறையிடலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தலாம்? அதை விடுத்து அரசிடமும் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஏழைக் குழந்தைகளையும் கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதை அரசும் வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது.

    கல்வி உரிமைச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில்வதையும், அவர்களிடம் எந்த கட்ட ணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணம் குறைக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அரசு அழைத்து பேசி, இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×