என் மலர்
நீங்கள் தேடியது "ganja seized"
- முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
- கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை.
நாகர்கோவில்:
புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வரட்டது. அப்போது ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பார்சல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது காக்கி கவரில் 8 பார்சல் இருந்தது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் செரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
அந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பதும், அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
- லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும் வந்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22-ந்தேதி தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி அருகே முடச்சிக்காட்டில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கிருந்த பாலத்தில் லாரியில் இருந்து, பெரிய பெரிய பொட்டலங்களை 3 பேர் காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில், சுமார் 330 கிலோ அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரான தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுார் ஊத்துமலையை சேர்ந்த பெரமராஜ் (வயது 34), பேராவூரணி அருகே காரங்குடாவை சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணிசத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்து கைது செய்தனர்.
இதில் தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா (52) என்பவர், ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகே அனகப்பள்ளியில் கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும், இதற்கு தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான படகை ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து லாரி டிரைவர் பெரமராஜ் மூலம் டூல்ஸ் பாக்ஸ் என்பது போல ஒரு பெட்டியை உருவாக்கி, அதை லாரியின் அடியில் பொருத்தி அதில் கஞ்சாவை பதுக்கி தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்கு வருவதற்காக லாரிக்கு கர்நாடக பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி உள்ளனர். பிறகு, தமிழக எல்லையில் இருந்து சென்னை, விழுப்புரம் வரை சென்னை பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி உள்ளனர். லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும் வந்துள்ளது.
பின்னர், திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு வரும் போது, லாரியின் உண்மையான பதிவெண் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி, பேராவூரணியில் வந்து கஞ்சாவை காரில் மாற்றி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து 330 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அண்ணாதுரைக்கு சொந்தமான 3 படகுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கருப்பையா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி. ஷனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் கஞ்சா கடத்தல் கும்பலிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து தஞ்சை விளார் சாலையில் உள்ள கருப்பையா வீடு மற்றும் தஞ்சை புதுப்பட்டினம் பகுதியில் உள்ள அவரது உறவினர் ஒருவர் ஆகியோர் வீடுகளில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து, இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என விசாரித்தனர். இதையடுத்து ரூ.37.50 லட்சம் பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கருப்பையாவை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சையில் நடந்த இந்த அதிரடி சோதனை சம்பவம் டெல்டா பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
- லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக தஞ்சை சிறப்பு போலீஸ் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீசார் பேராவூரணி முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி- ஊமத்தநாடு சாலையில் பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 300 கிலோ ஆகும்.
தொடர்ந்து, போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 44), தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (34), அம்மணிச்சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
- தப்பியோடிய ராகுல் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி:
தீபாவளி பண்டிகையையொட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குரும்பூர் மேடு அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் 150 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பதும்,அதனை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றிருப்பதும் தெரிய வந்தது.
இதற்கிடையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில் ஒருவர் தப்பியோடி விட்டார். காரிலிருந்த நாகராஜ் (வயது 20), தவமுருகன் (வயது 26), ஸ்டாலின் (வயது 36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய ராகுல் என்பவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பண்டிகை நேரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்த காசித் துரை தலைவனார் (வயது 23), தூத்துக்குடியை சேர்ந்த முத்து கல்யாணி(22), கீழப்புதூரை சேர்ந்த லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த கலைச்செல்வன்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த சுமார் 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.
உசிலம்பட்டி:
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் மார்நாடு கருப்பசாமி கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருந்தது கண்டறியப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக வருசநாடு அருகே உள்ள கும்மணந்தொழுவை சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த வீரமணி மற்றும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கர மையிலா என்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.
இதில் கும்மணந்தொழுவைச் சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இருவரும் கோவை 110 பட்டாலியன் பிரிவில் பிராந்திய ராணுவ படை வீரர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
மேலும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கரமையிலா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவில் வசித்து வருவதாகவும், அவர் மூலம் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் வைத்து பிரித்து எடுத்து செல்ல முயன்றபோது பிடிபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- கஞ்சா பொட்டலங்கள் குறித்து மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்பது தெரியவந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பம்ப் ஹவுஸ் அருகில் இன்று காலை 13 பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. அவ்வழியாக வந்த மீனவர்கள் அந்த பொட்டலங்கள் என்னவென்று தெரியாமல் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரியவந்தது.
உடனடியாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது 13 பொட்டலங்களிலும் தலா 2 கிலோ வீதம் 26 கிலோ கஞ்சா இருந்ததும், இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்பதும் தெரியவந்தது.
இலங்கைக்கு கடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதூர் பாண்டியாபுரம் பகுதியில் வந்த 2 சொகுசு கார்களை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.
- போலீசார் சுதாரித்து கொண்டு காரில் வந்த 6 பேரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் தூத்துக்குடி-எட்டையாபுரம் சாலையில் சுங்கச்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதூர் பாண்டியாபுரம் பகுதியில் வந்த 2 சொகுசு கார்களை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டைகளில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். எனினும் போலீசார் சுதாரித்து கொண்டு காரில் வந்த 6 பேரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 10 பேரை போலீசார் பிடித்து கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகே கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மீண்டும் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மனைவி சுமா (29), கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டா பகுதியைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மனைவி சாரதம்மா (39) மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (52) ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பொதுமக்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மூன்று பேரும் 10 கிலோ எடையிலான கஞ்சா பொருட்களை ஓசூர் அருகே உள்ள காளிங்கவரம், பாரதிபுரம் பகுதிக்கு வாங்கி வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் அப்பகுதிக்கு சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பது அதிகரித்துள்ளது. மதுரையில் உள்ள கீழ்மதுரை ரெயில் நிலையம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கீழ்மதுரை ரெயில்நிலையம் அருகே மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 24 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சிடைந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திடீர்நகர் அலாவுதீன் தோப்பு சலீம் மகன் சசீர் (வயது23), வாடிப்பட்டி வினோபா நகர் சொக்கலிங்கபுரம் காந்தி மகன் திலீப் குமார் (22), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வெள்ளாளர் தெரு செல்வம் மகன் குருமூர்த்தி(20), உசிலம்பட்டி வடக்கு தெரு நரியம்பட்டி சந்திரன் மகன் சரத்குமார் (22) என்று தெரியவந்தது.
இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோட்டம் பிடித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூட்டை கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து 10 மூட்டை கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை அருகே பேட்டையை சேர்ந்த முருகானந்தம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (25) கோவிலூரை சேர்ந்த சசிகுமார் (20) என்பதும் அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- முக்கிய ரெயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 4 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை:
கஞ்சா வேட்டை 4.0 திட்டத்தின் கீழ், சென்னை சென்டிரல், எழும்பூர், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை சென்டிரல், எழும்பூர், சேலம், கோவை உட்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் நடத்திய சோதனையில் 670 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 4 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா வழியாக தமிழகம் வரும் அனைத்து விரைவு ரெயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட இதர தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என தனி படையினர் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக ரெயில்வே போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.