என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police explain"

    • கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
    • பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.

    சேலம் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பு என்று வெளிவந்த செய்தி குறித்து காவல் துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமகிருஷ்ணன் அம்பேத்கார் காலனி அதிகாரிப்பட்டி அம்மாபேட்டை என்பவர் ஒரு சிறுமியுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) சுமார் ஒரு வருடமாக நட்பில் இருந்துள்ளார்.

    சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பிரம்மநாயகம் என்பவர் அந்த சிறுமிக்கு தவறாக கைபேசி அழைப்பு கொடுத்து தன்னை அவளுடைய உறவினர் என்று அறிமுகப்படுத்தி மரியாதைக்குன்றிய வார்த்தைகளில் பேசியுள்ளார்.

    இதை சிறுமி ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தபோது அவர் பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரம்மநாயகம் மீண்டும் சுரேஷ் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி நுவங்கி அதன் வழியாக தொடர்பு கொண்டு கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.

    சிறுமி அவரை பிளாக் செய்து அவர் அனுப்பிய செய்திகளை ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். பிரம்மநாயகத்தை பிடிப்பதற்காக ராமகிருஷ்ணன் ஒரு போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒரு பெண் பெயரில் உருவாக்கி சில நாட்களாக பிரம்மநாயகத்துடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார்.

    ராமகிருஷ்ணளின் நோக்கம் பிரம்மநாயகத்தை சேலத்திற்கு வரசெய்து அவர் அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகை படங்களை நீக்க செய்து மேலும் இனி சிறுமியை தொந்தரவு செய்யாதவாறு எச்சரிப்பதற்காகவும் அந்த ஆன்லைன் உரையாடல் அடிப்படையில் பிரம்மநாயகம் இன்று 25.10.2025 ம்தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    ராமகிருஷ்ணன் அவரது நண்பர்கள் வினிக்குமார் மற்றும் பிரதீப்ராஜ் மூவரும் பிரம்மநாயகத்தை பின்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிள் உள்ள பாலம் அருகில் வருமாறு கேட்டுள்ளனர்.

    அங்கு அவர்கள் பிரம்மநாயகத்தை தாக்கி அவரது அலைப்பேசியை பறித்து உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலின் நோக்கம் பிரம்மநாயகம் இனி அந்த சிறுமியை தொந்தரவு செய்யாமல் இருப்பதையும் அவளுக்கு அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகைப்படத்தை அவரது மொபைலில் இருந்து நீக்குவதை உறுதி செய்வதே ஆகும்

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
    • 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது18) என்ற மகனும், 1 மகளும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்வியை தொடர்ந்தார். தற்போது சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு அவர் படித்து வருகிறார்.

    அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பெருமாள்புரம் திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை தனது நண்பன் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அவரை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த் நகரில் வைத்து சிலர் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாகவும் அவர் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லேசான காயங்களுடன் இருந்த அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

    இதனிடையே அவரை தாக்கிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முன்னதாக மாணவன் சின்னதுரையிடம் விசாரித்த போது, இணையதள செயலி மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவர் திருமண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று தன்னை அழைத்ததாகவும், அதன்படி அப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு திடீரென வந்த கும்பல் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் பி.என்.எஸ். 309(பி) காயத்தை ஏற்படுத்தி சொத்துக்களை வழிப்பறி செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவ தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம்பெண்கள் 6 பேரை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். #Sabarimala #AyyappaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    சபரிமலை கோவில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். தந்திரி கண்டரருராஜீவரு உடன் இருந்தார். நேற்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

    நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. இன்றும் சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



    வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்கு தங்க ஆபரணங்களில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதே சமயம் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இந்த நிலையில் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2 இளம்பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்து உள்ளது.

    விசாகபட்டினத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய பம்பை வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் வயதில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது ஆதார் அட்டையை போலீசார் சரி பார்த்தனர். அப்போது அதில் அவருக்கு 49 வயது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பெண் தனக்கு 50 வயது ஆகிவிட்டதாகவும் ஆதாரில் தவறாக வயது குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் அந்த பெண் சாமி தரிசனத்திற்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அவருக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார்கள். இதே போல கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் குழுவில் இடம் பெற்ற ஒரு பெண்ணுக்கு 30 வயதுதான் ஆகியிருந்தது. அவர் சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு சென்றால் பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துவார்கள் என்பதால் அந்த பெண்ணுக்கும் அறிவுரை வழங்கி அவரை திருப்பி அனுப்பினார்கள்.

    இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழுவினர் இன்று காலை சபரிமலை செல்வதற்காக வந்தனர். அந்த குழுவில் 50 வயதிற்கு உட்பட்ட 4 இளம்பெண்களும் இருந்தனர். அவர்களை நிலக்கல்லில் தடுத்து நிறுத்திய போலீசார் இளம்பெண்கள் சபரிமலை சென்றால் ஏற்படும் பிரச்சினையை எடுத்துக்கூறினார்கள்.

    அதற்கு அந்த இளம்பெண்கள் தாங்கள் பம்பை வரை மட்டும் செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசாரிடம் கூறினார்கள். அதே சமயம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது சபரிமலை செல்லப் போவதாக மாற்றிக் கூறினார்கள்.

    போலீசாரின் அறிவுரையை ஏற்று 4 பெண்களும் சபரிமலை செல்லும் திட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.  #Sabarimala #AyyappaTemple
    ×