search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மீன் வியாபாரியை தாக்கி ரூ.15 ஆயிரம் பறிப்பு
    X

    திருவள்ளூர் அருகே மீன் வியாபாரியை தாக்கி ரூ.15 ஆயிரம் பறிப்பு

    • மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி லட்சுமி.
    • நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. மீன் வியாபாரி. இவர் பட்டரை அரசு பள்ளி எதிரே மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தேவன், பாலாஜி, வெங்கடேசன், வரதராஜன், கவுரிசங்கர் ஆகிய 5 பேரும் லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×