search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extortion of money"

    புகளூர் அருகேஒப்பந்ததாரரை கடத்தி பணம் பறித்த தூத்துக்குடி வாலிபர்கள்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 48 ). இவர் புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலை மற்றும் தமிழ்நாடு முழுவதும் சிவில் ஒப்பந்த காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.

    செல்வக்குமாரிடம் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவ னத்தில் நிவின் ஸ்டார் செல்வகுமாரின் சிவில் காண்ட்ராக்டில் ஒப்பந்தம் செய்து பணியை முடித்து விட்டு அதற்கு உண்டான தொகையை பெற்றுக் கொண்டனர். பின்னர் நிவின் ஸ்டார் மேலும் பணம் வேண்டும் என்று செல்வகுமாரிடம் கூறி யுள்ளனர்.

    செல்வகுமார் பாலத்து றையில் உள்ள தனது பெயிண்ட் கடையை இரவு மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கூலக்கவுண்டனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வக்குமாரை தடுத்து நிறுத்தி கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி அவரை காரில் கடத்திச் சென்று தகாத வார்த்தை களால் பேசி தாக்கியுள்ளனர்.

    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து செல்வகு மாரிடம் இருந்து அவர் வைத்திருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகுமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் தூத்துக்கு டியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • 2 பெண்கள் தப்பி ஓட்டம்
    • ஆட்டோவில் ஏறி பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டம்மாள் (வயது 60). இவர் மருந்து வாங்க அணைக்கட்டு பகுதிக்கு ஆட்டோவில் வந்தார்.

    அப்போது இடையில் 2 பெண்கள் ஆட்டோவில் ஏறி மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

    அணைக்கட்டு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கியதும் 2 பெண்கள் சேட்டம்மாளிடம் குறைந்த பணத்தில் அதிக தீபாவளி பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறினர். இதற்கு சேட்டம்மாள் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு கில்லாடி பெண்களோ காது, மூக்கில் உள்ள நகையை அடமானம் வைத்து கொடு என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேட்டம்மாள் அணைக்கட்டு பகுதியில் உள்ள அடகு கடையில் தனது நகையை கழற்றி அடமானம் வைத்தார். அதில் வந்த ரூ.6 ஆயிரத்தை சேட்டம்மாள் தீபாவளி பரிசு பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறிய பெண்களிடம் கொடுத்தார்.

    தீபாவளி பரிசு பொருட்களை எடுத்து வருவதாகவும், அதுவரை பஸ் நிலையத்தில் இருக்கும்படி சொல்லி விட்டு அங்கிருந்து மாயமாகி விட்டனர்.

    தீபாவளி பரிசு பொருட்கள் எடுத்து வருவார்கள் என்று நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சேட்டம்மாள் காத்திருந்தார். ஆனால் பலே கில்லாடி பெண்கள் வரவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேட்டம்மாள் இது குறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவர்கள் பணம் பறித்தனர்
    • வடவள்ளி போலீஸ்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள யமுனா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் நேற்று இரவு பணி முடிந்து சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து பிரபாகரன் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

    விசாரணையில் 3 வாலிபர்களில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • திருச்சி தாராநல்லூர் வாலிபரிடம் பணம் பறிப்பு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி 

    திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா( வயது 37) இவர் எடதெரு பொது கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அங்கு வந்த திருச்சி எடத்தெரு பிள்ளை மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜாக்கி என்கிற ஜாக்கிஜான் (28) அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ. 2000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.இது குறித்து ராஜா காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பணம் செலுத்திய பின் 2 மாதங்களுக்கு மட்டுமே கூறியபடி பணம் கிடைத்துள்ளது.
    • நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மதுரை:

    ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் 2 தவணையாக மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 10 மாதத்தில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்றும், ரூ.5 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு தவணையாக 75 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதத்தில் 7 லட்சத்தி 50 ஆயிரம் கிடைக்கும் என்றும், ரூ.5 லட்சம் செலுத்தினால் ஒரே தவணையாக 18 மாதத்தில் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்றும், ரூ.25 லட்சம் செலுத்தினால் 5 வருடத்திற்கு வருடத்தில் 4 தவணையாக ரூ.83 லட்சம் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்தது.

    இதை நம்பி ஏராளமான ராணுவ வீரர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பணம் செலுத்திய பின் 2 மாதங்களுக்கு மட்டுமே கூறியபடி பணம் கிடைத்துள்ளது. அதன் பின்பு தவணை தொகை கொடுக்கப்படவில்லை. 2 வருடங்கள் ஆகியும் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    'இந்த நிலையில் தாங்கள் இழந்த பணத்தை பெற்றுத் தரக்கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மதுரை மாவட்ட கலெக்டரிடம் முதலீடு செய்த ராணுவ வீரர்கள் மனு அளித்தனர்.

    மேலும் அந்த நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராணுவ வீரர்கள் சிறிது காலம் மட்டுமே குடும்பத்துடன் இருப்பார்கள் என்பதால் அவர்களால் நிறுவனம் குறித்து விசாரிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு அவர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி உள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர். 

    • வாலிபரிடம் பணம் பறித்த ரவுடிகள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
    • 2 பேர் கைது செய்யப்பட்டனர்

    திருச்சி ,

    திருச்சி மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 33) இவர் சிந்தாமணி அண்ணா சிலை அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அவரிடம் பணம் ேகட்டனர். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே அந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டி, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 2000 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் உடனடியாக கோட்டை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து சென்று பணம் பறித்துச் சென்ற குழுமணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஆட்டோ சக்திவேல் (35), சிந்தாமணி புது தெரு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ்குமார் (23) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

    ரவுடி பட்டியலில் இருக்கும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு பகுதியைச் சேர்ந்த முகில் குமார் (27) ஆகிய இரண்டு ரவுடிகளையும் தேடி வருகின்றனர்.

    • மையத்தில் இருந்து ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
    • பொதுமக்கள் ஓடி வருவதற்குள் பணப்பையுடன் மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையம் சின்னச்சாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). இவர் அனுப்பர்பாளையம் பகுதியில் பண பரிவர்த்தனை மையம் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2-ந்தேதி தனது மையத்தை பூட்டிவிட்டு, மையத்தில் இருந்து ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    அங்கேரிபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், அவரை கட்டையால் தலையில் அடித்துவிட்டு அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியது.

    இதனை சற்றும் எதிர்பாராத சிவராஜ் திருடன் திருடன் என கத்தினார். பொதுமக்கள் ஓடி வருவதற்குள் பணப்பையுடன் மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர். இது தொடர்பாக சிவராஜ் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பணப்பறிப்பில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர் அருகே லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

    பெரம்பலூர் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சின்னதம்பி (வயது 33), லாரி டிரைவர். இவர் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் சரக்கு ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு காத்திருந்தார்.அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் சின்னதம்பியை அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னதம்பியிடம் பணம் பறித்தது பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜாவின் மகன் சந்துரு (23), பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, புதிய காலனியை சோ்ந்த தனசேகரின் மகன் விஷ்ணு (19), பாடாலூர் அண்ணா நகரை சேர்ந்த சதக்கத்துல்லாவின் மகன் சாதிக் பாட்சா (22) என்பது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்துரு, விஷ்ணுவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சாதிக் பாட்ஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விவசாயிடம் ரூ.35 லட்சம் பணம் பறிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி,

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டியை சேர்ந்த பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் சிவாஜியிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி நமக்கு மேலும் ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார். இதனையடுத்து லக்காபுரம் வந்தவுடன் ராஜ்குமார் என்பவருக்கு சிவாஜிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும், உறவினர்கள் 2 பேரையும் ஏற்றிக்கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே வந்த காரில் இருந்த 4 நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக்கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் உறவினர்கள் 2 பேரையும் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் வைத்திருந்த ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி எனது பணம் ரூ.35 லட்சத்தை மீட்டு தருமாறு மொடக்குறிச்சி போலீசில் சம்பவத்தன்று இரவு புகார் அளித்தார்.

    புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வட்டாரத்தில் கூறியதாவது:- விவசாயிடம் பணம் பறித்த கார் கொள்ளையர்கள் குறித்து புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். செல்போன் எண்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் துப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • இளங்கோ கூலி வேலை செய்து வருகிறார்.
    • பணம் பறித்த ஸ்ரீஹரியை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை நீலிகோண ம்பாளையம் அருகே செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது50).

    இவர் அந்த பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஸ்ரீஹரி (20). சம்பவத்தன்று இளங்கோ வீட்டில் இருந்தார். அப்போது ஸ்ரீஹரி அவரது வீட்டிற்கு சென்று மது அருந்துவதற்கு பணம் தரும்படி கேட்டார். இதனையடுத்து அவர் என்னிடம் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு மட்டுமே பணம் உள்ளது என தெரிவித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஹரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.250 பணத்தை பறித்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடி சென்ற ஸ்ரீஹரியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 4 பேர் கும்பல் அட்டகாசம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஒலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). மெக்கானிக். இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று அதிகாலை பஸ்சில் வந்தவாசிக்கு திரும்பினார்.

    அதன்பின் வந்தவாசியிலிருந்து ஒலப்பாக்கத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மேல் பாதிரி இருளர் குடியிருப்பு அருகே சென்றபோது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை மடக்கியுள்ளனர்.

    பின்னர் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.23 ஆயிரம், செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து மணிகண்டன் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடு பட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • மோகனசுந்தரம் வேலைக்கு செல்வதற்காக சத்தி ரோடு கணபதி அருகே நடந்து சென்றார்.
    • ரூ.600-யை எடுத்து கொண்டு தப்பினார்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(65). மீன் கடை ஊழியர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்வதற்காக சத்தி ரோடு கணபதி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியை மோகனசுந்தரத்தின் கழுத்தில் வைத்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.600-யை எடுத்து கொண்டு தப்பினார்.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி சின்னசாமி நகரை சேர்ந்த அரவிந்தசாமி(28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கணபதி மாநகரை சேர்ந்தவர் காவலாளி சாமிநாதன்(52). சம்பவத்தன்று இவர் கணபதி மணியக்காரம் பாளையத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணம் பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் பணம் பறித்த ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த ஆதித்யன்(28) என்பவரை கைது செய்து ஜெயிலில் யில் அடைத்தனர்.

    ×