search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியை கடத்திச் சென்ற தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது
    X

    லாரியை கடத்திச் சென்ற தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 39). இவரும், அவரது நண்பர் கள் 2 பேரும் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைக்கும் லாரியை வாங்கி தொழில் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு மனோகர் வீட்டின் முன்பு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது லாரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் மர்ம நபர்கள் லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை அருகே உள்ள சேரியேந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, அவரது மகன் பிரபு, உறவினர் மகன் மணிகண்டன் ஆகியோர் இணைந்து மனோகரின் வீட் டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றதும், ஏழுமலைக்கும், மனோகரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததால் லாரியை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஏழுமலை, பிரபு, மணிகண் டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×