search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
    X

    ஏர்வாடி அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

    • சம்பவத்தன்று கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் , குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
    • அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார்.

    களக்காடு :

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (23), குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×