search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி போலீஸ் நிலையங்களில் காலாவதியான 19 வாகனங்கள் ஏலம்
    X

    தருமபுரி போலீஸ் நிலையங்களில் காலாவதியான 19 வாகனங்கள் ஏலம்

    • 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
    • அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல் துறையில் காவல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு காலாவதியான அரசு காவல் வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதனை ஏலம் முறையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஏற்கனவே ஏலத்தில் விற்பனை செய்யப்படாமல் உள்ள 5 வாகனங்களுடன், தற்போது கழிவு செய்யப்பட்டுள்ள 14 வாகனங்களையும் சேர்த்து, 19 வாகனங்களான 2 ஈச்சர், 3 பொலேரோ, 1 டாடா சுமோ கிரான்டே, 1 டாடா ஸ்பேசியோ, 1 அம்பாஸ்டர், 2 எம்.எம் 540 ஜீப் மற்றும் 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

    அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏலம் விடப்படும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வாகனத்தை பார்வையிட அனுமதிக்கப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆயுதப்படை வாகனப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி முன்பணத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.

    அவ்வாறு வைப்புத் தொகையை செலுத்த தவறியவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏலம் எடுத்து 30 நிமிடத்தில் பணம் செலுத்தாதவர்களின் ஏலம் ரத்து செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மறு ஏலம் விடுப்படும்.

    மேலும், பணம் கட்டத் தவறியவரின் வைப்பீட்டுத் தொகையை திருப்பி தர இயலாது. ஏலம் முடிந்து 30 நிமிடங்களில் பணம் செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.

    Next Story
    ×