search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் பறிமுதல் செய்த 95 வாகனங்கள் ஏலம்
    X

    போலீசார் பறிமுதல் செய்த 95 வாகனங்கள் ஏலம்

    • வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட95 வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கையில் வாகன உரிமையாளர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் 95 வாகனங்களையும் யாரும் உரிமை கோராததால் அரசுடைமையா க்கப்பட்டது.

    மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 9-ந் தேதி காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாகனங்களை 6,7ஆகிய தேதிகளில் பார்வையிடவும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத் தொகையை ராணிப்பேட்டை ஆயுதப்படையில் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    9-ந்தேதி காலை 10 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி.தொகையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×