search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle auction"

    • வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி கலந்து கொண்டனர்.
    • ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பழைய டாட்டா ஸ்பாசியா கோல்டு 4 சக்கர வாகனம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் யூனியன் சேர்மன் ஜனகர் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

    வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இறுதியில் அதிகபட்ச தொகையாக ரூ.65,050-க்கு ஏலம் விடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், ஓன்றிய பொறியாளர் வெள்ளைபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 5-ந் தேதி நடக்கிறது
    • முன்வைப்பு தொகையாக ரூ.6,500 செலுத்த வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் கழிவு செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது. ஏலம் வருகிற 5-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

    ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் வாகனத்திற்கான முன்வைப்பு தொகையாக ரூ.6,500 "Information and Public Relations Officer, Vellore" பெயரில் வங்கி வரை வோலை மற்றும் உரிய புகைப்பட அத்தாட்சி நகலுடன் வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேரில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஏலம் கேட்கும் ஏலதாரர் ஏலத்தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதம் தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.

    அதன்பின்னர், ஏலதாரருக்கு வாகன விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். கூடுதலாக ஏலம் கேட்டு வாகனத்தினை பெற்று க்கொண்ட எலதாரரை தவிர மற்ற ஏலதாரர்களுக்கு அவர்கள் முன் வைப்பு த்தொகை திரும்ப வழங்கப்படும் என கலெ க்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
    • அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுத படை மைதானத்தில் இன்று பொது ஏலம் விடப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் கென்னடி, காலால் உதவி ஆணையர் மாறன் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஏலம் நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட 2, 3, 4 சக்கர வாகனங்களில் மொத்தம் 132 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

    அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் வாகனங்களை எடுப்ப தற்காக முன் பணம் கட்டிய 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஏலம் விடப்பட்ட வாகனங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ற வாறு ஏலத்தில் வாகனத்தை எடுத்து மீதி தொகையும் செலுத்திவிட்டு வாக னங்களை வாங்கி சென்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
    • இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வருகிற 7- ந் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 முன் பணம் கட்ட வேண்டும்.

    வருகிற 5- ந் தேதி காலை 10 மணி முதல் 6- ந் தேதி மாலை 5 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை வருகிற 21-ந் தேதி பொது ஏலத்தில் விடுகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 21-ந் தேதி காலை 9 மணி முதல் வேலூர் நேதாஜி மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

    வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியபின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலத்தொகையுடன் 28 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான இரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

    விபரங்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமல்பிரிவு, வேலூர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
    ×