search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஏலம்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஏலம்

    • வருகிற 5-ந் தேதி நடக்கிறது
    • முன்வைப்பு தொகையாக ரூ.6,500 செலுத்த வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் கழிவு செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது. ஏலம் வருகிற 5-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

    ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் வாகனத்திற்கான முன்வைப்பு தொகையாக ரூ.6,500 "Information and Public Relations Officer, Vellore" பெயரில் வங்கி வரை வோலை மற்றும் உரிய புகைப்பட அத்தாட்சி நகலுடன் வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேரில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஏலம் கேட்கும் ஏலதாரர் ஏலத்தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதம் தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.

    அதன்பின்னர், ஏலதாரருக்கு வாகன விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். கூடுதலாக ஏலம் கேட்டு வாகனத்தினை பெற்று க்கொண்ட எலதாரரை தவிர மற்ற ஏலதாரர்களுக்கு அவர்கள் முன் வைப்பு த்தொகை திரும்ப வழங்கப்படும் என கலெ க்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×