என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன்: செல்வப்பெருந்தகை சொன்னது இதுதான்
- தமிழக மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
- இந்தக் கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தார்.
டிடிவி தினகரன் இன்று கூட்டணியில் சேர்ந்தும் இபிஎஸ் பெயரை சொல்வதையே தவிர்க்கிறார். ஆகவே, இந்தக் கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி.
மோடி ஒரு முறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிரதமர் மோடி ஒடிசாவுக்குச் சென்றால் தமிழகத்தில்தான் ஒடிசாவின் கஜானா சாவி இருக்கிறது என பேசுகிறார். பீகாருக்குச் சென்றால் பீகாரிகளை தமிழக மக்கள் வஞ்சிக்கிறார்கள் என்று கூறுவார்.
இப்படி எல்லாம் பேசிவிட்டு தமிழக மக்கள் யாரும் விவரம் இல்லாதவர்கள், மறந்துவிடுவார்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என பேராசையோடு படையெடுக்கிறார்கள். இந்தப் படையெடுப்பை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.
என்டிஏ கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பலில் யாரெல்லாம் பயணிக்கிறார்களோ அவர்களும் சேர்ந்துதான் மூழ்கிப் போவார்கள் என தெரிவித்தார்.






