என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் இறுதி நிலவரம்: தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி
    X

    பீகார் இறுதி நிலவரம்: தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி

    • தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
    • இந்தியா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

    இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் நிதிஷ்குமார் பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கிறார்.

    Next Story
    ×