என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் : வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது
- உப்பள பாத்திகளில் இருந்து உப்புவாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொடர்ந்து மழை இல்லாமல் வெயில் அடித்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-வது இடத்தில் உள்ளது. வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான பராமரிப்பு பணி இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகளவில் அடிக்க தொடங்கிய நிலையில் இன்று முதல் உப்பு உற்பத்தி தொடங்கி உள்ளது. இதையொட்டி உப்பு பாத்திகளில் உப்பு வார் முதல் தொடங்கப்பட்டுள்ளது.
உப்பள பாத்திகளில் இருந்து உப்புவாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வார்முதல் செய்த உப்பை சேமிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை இல்லாமல் வெயில் அடித்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






