search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur"

    • எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.
    • இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    இங்கு சிவன் சயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி. 850-ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133-வது தேவாரத்தலம் ஆகும்.

    ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, நட்டுவன், பிள்ளையார் சந்திடு தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார்.

    மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு-சற்று தடித்த உயர்ந்த பாணம், உள் சுற்றில் வெண்ணெய் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.

    தெற்கு நோக்கிய சன்னதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம் கதை சூலம் ஏந்தி இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தாகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலாவடிவம் உள்ளது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர். மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.

    தலபெருமை:

    கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். குப்த கங்கை ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழிகூற வேண்டும் என வேண்டினாள் அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோச்சனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.

    அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும். காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த தங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியைவிட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது

    கார்த்திகை ஞாயிறு:

    தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர், இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார் ஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால் நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை

    கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் இங்கு அபயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள். துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள். ராகுவும் கேதுவும் ஓரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே. காண முடியும் என்று கூறப்படுகிறது.

    யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார் எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம் காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    தலவரலாறு

    எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என்று எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இன்றவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, `வேண்டும் வரம் கேள் என்றார்

    அதற்கு எமனும், `இறைவர் அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர் திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் ரோத பிரம்மா பிடித்து என்னை வாட்டுகிறது பாவமும் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை என்றார்.

    எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், `எமதர்மனே இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என்று கூறமாட்டார்கள் நோய் வந்ததாலும் வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என்றும் கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும் நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமடுக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு. மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய் இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்னரே என்னை தரிசிப்பார்கள் என்று அருளினார். அதன்படி இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல் வழியாடு நடக்கிறது.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி:

    அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீவாஞ்சியம்  610 110 திருவாரூர் மாவட்டம்.

    • கார் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
    • முதல்-அமைச்சரின் 4 நாள் பயணம் நாளையுடன் நிறைவடைகிறது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ளார்.

    நேற்று திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், நேற்று மாலை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்தார்.

    இன்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார்.

    மாலையில் சிறிது ஓய்வெடுக்கும் முதலமைச்சர் நாளை (27.8.23) திருவாரூர் அருகில் உள்ள பவத்தரமா ணிக்கத்தில் நடைபெறும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற நான்கு நாள் பயணம் நாளையுடன் நிறை வடைகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை ஒட்டி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது. மேலும் நாளை மாலை வரை திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க கூடாது என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    • மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
    • மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 400மீ குழாய் அமைப்பு மற்றும் மின்விசை அறை ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் அனுராக் தலைமையில் செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தார்.

    இவ்விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாலசுந்தரம், ஓ.என்.ஜி.சி பொறியியல் துறை அதிகாரி சுதிஷ், பொது மேலாளர் சம்பத், ஏரியா மேனேஜர் சரவணன், மேலாளர் கண்ணன், கட்டுமானபிரிவு மேலாளர் ரெத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்குப் பகுதியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் மழை மற்றும் வெள்ளக்கால பயன்பாட்டிற்காக, ஓ.என்.ஜி.சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம் கட்டிடங்களை ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் அனுராக் முன்னிலையில் செல்வராஜ் எம்.பி. மற்றும் மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த செல்வராஜ் எம்.பி., அவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    இவ்விழாவில் ஒன்றி யப் பெருந்தலைவர்பாஸ்கரன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி ராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
    • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கடராஜூலு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகம் ஏற்ப 500 மரக்கன்று களை கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டி க்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.

    இதில் கல்லூரியின் செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் மேம், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் துணை முதல்வர்கள் துறை தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கீரனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது48). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    இதில் மன வேதனை அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார். இதில் மயங்கி கிடந்த பாலசுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. சார்பில் திருவாரூரில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #MKStalin #DMK
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புலிவலத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    ‘‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம்’’ என்ற மூன்று முழக்கங்களை முன்வைத்து கடந்த 3-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை 12,617 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருவதால் தி.மு.க. சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கி பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வரை நடைபெறும் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், ஈரோடு மாவட்டத்தில் பொருளாளர் துரைமுருகனும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலுவும் இன்று தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் இன்று காலை நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருவாரூருக்கு இன்று அதிகாலை வந்த மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் கார் மூலம் புலிவலம் ஊராட்சி விஷ்ணு தோப்பு என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    கூட்டத்தினரோடு தரையில் அமர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மக்கள் தெரிவித்த கருத்துக்களை உன்னிப்பாக கேட்ட மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தார்.

    கூட்டம் முடிந்த பின்னர் கட்சியின் ஊராட்சி செயலர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மக்கள் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு கட்சியை வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்.பி விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருவாரூர் வந்த தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு திருவாரூர் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து தி.மு.க தொண்டர்கள், மாணவரணி தொண்டர்படை, மகளிரணி என அனைத்து அணியினரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புலிவலம் கிராம சபை கூட்டத்தை முடித்துக்கொண்டு பிற்பகலில் மு.க.ஸ்டாலின் தஞ்சை செல்கிறார். அங்கு சங்கம் ஓட்டலில் ஓய்வெடுக்கும் அவர் மதியம் 3 மணிக்கு மாதாக்கோட்டையில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மாலை 5 மணியளவில் திருச்சிக்கு புறப்படும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.  #MKStalin #DMK
    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #Tiruvarurbyelection #OPanneerSelvam

    தேனி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான மனுதாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தினகரன் கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. சர்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், தினகரனின் அ.ம.மு.க. சார்பில் காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று நடந்த ஆட்சிமன்ற குழுவில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்பட வில்லை.

    இந்த நிலையில் திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    தேனியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஓ.பன்னீர் செல்வம் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் நாளை (7-ந் தேதி) காலை அறிவிக்கப்படுவார். தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர். எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tiruvarurbyelection #OPanneerSelvam

    திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    திருவாரூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் நீதிமோகன் (வயது 52). ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர். இவர் கடந்த 9-ந்தேதி மோட்டார் சைக்கிளில் தனது உதவியாளர் ராஜேந்திரன் என்பவருடன் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். பிடாரி கோவில் தெரு அருகே சென்றபோது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள், நீதிமோகனை குண்டுகட்டாக தூக்கி கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து ராஜேந்திரன், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நீதிமோகனை கடத்திய கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கடத்தப்பட்ட நீதிமோகன் மாத தவணை திட்டத்தில் நிலம் வழங்குவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களால், நீதிமோகன் கடத்தப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நீதிமோகனை விடுவிக்க கடத்தி சென்றவர்கள் ரூ.10 கோடி கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நீதிமோகன் அடைத்து வைக்கப் பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் அங்கு வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், நீதிமோகனை அந்த வீட்டிலேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த நிலையில் சாக்கோட்டையில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை நேற்று தனிப்படை போலீசார் மீட்டு, திருவாரூர் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோட்டூரை சேர்ந்த வெங்கடாச்சலம், ஜான்கென்னடி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் வெங்கடாச்சலம், கோட்டூர் அருகே குருவாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நீதிமோகனிடம் கமி‌ஷன் அடிப்படையில் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் திருவாரூர், கோட்டூர் பகுதிகளில் தவணை முறையில் பணத்தை வசூலித்து நீதிமோகனிடம் ஆசிரியர் வெங்கடாச்சலம் வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.7 கோடி வரை அவர் கொடுத்துள்ளார்.

    ஆனால் நீதி மோகன், நிலத்தை வழங்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் வெங்கடாச்சலத்திடம் புகார் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடாச்சலம், கூலிப்படையினருடன் நீதிமோகனை காரில் கடத்தியது தெரிய வந்தது.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    டிசம்பர் மாதம் நடைபெறும் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2-ந்தேதி மதுரையில் இறந்தார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி இறந்தார்.

    இவர்களின் மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    எம்.எல்.ஏ. மறைந்தால் அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.



    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் நடத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது.

    வழக்கமாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் போது நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் டிசம்பர் மாதம் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகளும் காலியாக உள்ளது. ஆனால் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் 18 தொகுதிகளையும் காலியிடம் என அறிவிக்கக்கூடாது என்று கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    எனவே இந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் 18 பேரும் எம்.எல்.ஏ.வாக தொடர வாய்ப்பு கிடைக்கும். எதிராக தீர்ப்பு வந்தால் எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியாமல் காலியிடமாக அறிவிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இதனால் அந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தகுதி நீக்க வழக்கில் விசாரணை நீடித்தால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதால் அரசியல் கட்சியினர் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency

    திருவாரூர் அருகே ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் நகை- பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாமி சுப்பிரமணியன் (வயது 54). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சாமி சுப்பிரமணியன் வீடு அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சாமி சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    இதனால் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம கும்பல், சாமி சுப்பிரமணியன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியில் இருந்த 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    சிறிதுநேரம் கழித்து கோவிலில் இருந்து வீடு திரும்பிய சாமி சுப்பிரமணியன், தனது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மரப்பெட்டியில் இருந்த நகை- பணம் கொள்ளை போய் இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். திருட்டு போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுபற்றி அவர் கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாமி சுப்பிரமணியன் கோவிலுக்கு சென்ற நேரத்தில் தான் திருட்டு நடந்துள்ளது. மேலும் கட்டிலுக்கு அடியில் உள்ள மரப்பெட்டியில் நகை- பணம் இருப்பதை நன்கு தெரிந்து கொண்ட நபர்களே இச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். இதனால் சாமி சுப்பிரமணியன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.#Tamilnews
    திருவாரூர் அருகே கொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகளை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த செட்டி சத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் ராஜேந்திரன். இவருக்கு செட்டி சத்திரம் பகுதியிலில் வசிக்கும் ஒரு தம்பதியினர் கொத்தடிமைகளாக குழந்தைகளை வைத்து வாத்து மேய்ப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த அந்த தம்பதிகளிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமியம்மா என்பதும் அவர்கள் பவானி (வயது 8), நாகராஜ் (10) ஆகிய குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.

    அந்த குழந்தைகளை அவர்கள் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்துள்ளனர். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் கொத்தடிமைகளாக இருந்த 2 குழந்தைகளை மீட்டனர்.

    இந்த சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×