என் மலர்
இந்தியா

சத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
- பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா-நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் 5 முதல் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
Next Story






