என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Security"

    • இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர்.

    கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

    அவர்கள் இங்கு 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள்.

    குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் கொடைக்கானல் அருகில் உள்ள வட்டகானல் பகுதியில் சுமார் 1 மாதம் வரை தங்கி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் மலை உச்சியில் அமர்ந்து தியானம் செய்தும் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு முன்பாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வெளிநபர்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனையிட்டு வருகிறார்கள்.

    24 மணி நேரமும் செயல்படும் இந்த சோதனைச்சாவடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினர் தங்கியுள்ள பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சி.சி.டி.வி. காமிராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரெயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதால், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #BombThreat #ChennaiRailwayStation
    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்ணுக்கு நேற்று இரவு 12 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் இந்த நாச செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னை மாநகர கட்டுப்பாட்டு போலீசார் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூரை நோக்கி வந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    சென்னை ரெயில்வே போலீசார் ஜோத்பூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்ததால் வழியில் நிறுத்தி சோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்தனர்.



    அதன்படி நள்ளிரவில் ஜோத்பூர் ரெயிலில் வெடி குண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. என தெரிய வந்தது. இதையடுத்து அந்த ரெயில் இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடைந்தது.

    ரெயிலில் சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பயணிகள் இறங்கியதும் போலீசார் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி வெடிகுண்டு சோதனை நடத்தினர்.மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் வழியாக சோதனை நடத்தப்பட்டது.

    தீவிர சோதனைக்கு பிறகு அது ‘வெறும் புரளி’ என தெரியவந்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் பொருட்களும் தீவிர சோதனை நடத்தப்பட்டன.

    வடமாநிலத்தில் இருந்து வந்த பயணிகளை அழைப்பதற்காக அவர்களது உறவினர்களும் நிலையத்திற்கு வந்திருந்தனர். ரெயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. #BombThreat #ChennaiRailwayStation
    ×