என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gun fire death"

    • ஆப்கானிஸ்தான்- பாக்., சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள்.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

    கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிர் இழந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

    இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இறுதிகட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடந்தது.

    இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் இதனால் பதிலடி கொடுக்க வேண்டியது இருந்தது என்றும் பாகிஸ்தான் கூறி இருக்கிறது.

    • தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை.

    மத்திய ஜப்பானின் கிபு பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஒரு ராணுவ வீரர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

    தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்திய வீரரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதலை நடத்தியது யார் என போலீசார் தெரிவிக்கவில்லை.

    ஓமன்:

    ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டின் வாடிகபீர் பகுதியில் உள்ள மசூதி அருகே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என போலீசார் தெரிவிக்கவில்லை.

    ×