என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கழிவறைக்கு சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
    X

    கழிவறைக்கு சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

    • போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
    • பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுமி மாலை தனது தாயிடம் அடி வயிற்றில் வலி ஏற்படுவதாகவும், மேலும் பள்ளியில் நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த கே.வி.ஆர் நகர் சரக உதவி கமிஷனர் ஜான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு ஒன்று கூடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் நடந்த சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

    Next Story
    ×