search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்
    X

    இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட காட்சி

    தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்

    • இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது
    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோரின் ஆலோசனை படி 29-வது வார்டுக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையம், பாளையங்கோட்டை ரோடு, மீனாட்சிபுரம் உள்பட பல பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் 14-வது வார்டுக்குட்பட்ட வி.எம்.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    Next Story
    ×