search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா; 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் - மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை
    X

    தூத்துக்குடியில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா; 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் - மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை

    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது
    • நாளை மற்றும் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது.

    தூத்துக்குடி:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செய லாளர் ஜவகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 7-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மத்திய மாவட்ட பகுதிகளில் நாளை மற்றும் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது. நாளை புதுக்கோட்டை யில் மத்திய மாவட்டம் சார்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாப்படு கிறது. தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதேபோல் கந்தவேல்புரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஏழை, எளி யோருக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படும்.

    கமல்ஹாசன் பிறந்த நாளான 7-ந் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும்.

    இதேபோல் மூன்றாம் மைல் பகுதியில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்குதல், லயன்ஸ் டவுன் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 1-ம் கேட் காந்தி சிலை அருகே இனிப்புகள் வழங்குதல், தாளமுத்து நகரில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், வ.உ.சி. மார்க்கெட் அருகில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்படுகிறது.

    எனவே மத்திய மாவட்ட மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பாக கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தாளையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×