search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rural areas"

    • விளையாட்டு ஆணைய கூட்டத்தில் முடிவு
    • கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் ரூ.11 கோடியில் அமைப்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், விளையாட்டுக்களை மேம்படுத்தவும், வீரர்களை ஊக்கப்படுத்தவும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை உருவாக்கப்படும் என அறிவித்தார்.

    இதன்படி தனி துறை அமைக்க கோப்பு உருவா க்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்தவுடன் தனி துறை ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்காக இயக்குனர், தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இதனிடையே தனித்தனியே செயல்பட்டு வந்த புதுவை விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளி ஆகிய வற்றை ஒருங்கிணைத்து தமிழகம்போல புதுவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, துணைத்தலைவராக அமைச்சர் நமச்சிவாயம், உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ், கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விளையாட்டு சங்க தலைவர்கள், சர்வதேச பதக்கம் பெற்ற வீரர்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

    18 ஆண்டுக்கு பின் புதுவை விளையாட்டு கவுன்சில் கூட்டம் கல்வித்துறை வளாகத்தில் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். ஒலிம்பிக் சங்க தலைவர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இதில் விளையாட்டுகளை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப் பட்டது. புதிய பதவிகளை உருவாக்குவது, நிதி ஒதுக்கீடு, சம்பளம் உட்பட பல விஷ யங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற புதுவை விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 2004-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட வில்லை. நிலுவையில் உள்ள ரூ.7 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்தை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொகையை ஒதுக்கித்தர முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்தார்.

    தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் ரூ.11 கோடியில் அமைப்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.

    உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அரங்கத்தை முழுமையாக புதுப்பிக்க முடிவு செய்யப் பட்டது. லாஸ்பேட்டை யில் தரை அமைத்து பணிகளை முழுமையாக்கவும், ஸ்கேட்டிங் வீரர்களுக்கு தனி பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் 10 மினி மைதானங்கள் கட்ட மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி யுதவி பெற முடிவு செய்யப்பட்டது.   

    • பைபர் ஆப்டிக்கல் கேபிள் மூலம் 1 ஜி.பி., அளவில் மேம்பட்ட அலைவரிசை வழங்கப்படுகிறது.
    • மாவட்டம் முழுவதும் 265 கிராமங்களுக்கு, இணைய இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    காங்கயம் :

    தமிழகத்தில் தமிழ்நாடு பைபர் நெட் நிறுவனம் வாயிலாக 12,525 கிராம ங்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பைபர் ஆப்டிக்கல் கேபிள் மூலம் 1 ஜி.பி., அளவில் மேம்பட்ட அலைவரிசை வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் (எல் அண்டு டி), கிராமப்புற பகுதிகளுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்குவதற்கான பைபர் ஆப்டிக்கல் கேபிள் அமைக்கும் பணிகள் வெள்ளகோவிலில் துவங்கி முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. வெள்ளகோவிலில் மேட்டுப்பாளையம், வேலம்பாளையம், வள்ளி யரச்சல், பச்சாபாளையம், வீரசோழபுரம், பாப்பினி, வீரணம்பாளையம் பிரதான கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காங்கயம் பகுதியில் இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. மூலனூர், தாராபுரம், உடுமலை என அடுத்தடுத்த பகுதிகளில், பிரதான கேபிள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.மாவட்டம் முழுவதும் 265 கிராமங்களுக்கு, இணைய இணைப்பு வழங்கப்பட உள்ளது. மின் வாரிய அனுமதி பெற்று மின் கம்பங்களில் கட்டப்பட்டும் தேவையான இடங்களில் புதிய கம்பங்கள் போடப்பட்டு கேபிள் அமைக்கப்பட்டுவருகிறது.

    பிரதான கேபிள் அமைக்கப்பட்டபின் முதல்கட்டமாக, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், கிராமப்புற வங்கிகள், நூலகம், போலீஸ் நிலையங்களுக்கும், அதன்பின் தனிநபர் வீடுகளுக்கும் இணையதள இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளை தொடர்ந்து நகர பகுதிகளில் கேபிள் அமைக்கும் பணிகள் நடைபெறும்.மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன பிரிவினர் இணையதள கேபிள் அமைக்கும் பணிகளை கண்காணித்து வருகின்றனர். ஒரே கேபிளில் டிவி சேனல், தொலைபேசி இணைப்பு, இணையதள இணைப்பு வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பைபர் ஆப்டிக்கல் கேபிள் 3வகை இணைப்புகளையும் வழங்குவதற்கான கட்டமைப்பை கொண்டுள்ளது. கிராமப்புற மக்கள் ஆதார் திருத்தம், வருவாய்த் துறை சார்ந்த ஏராளமான அரசு சேவைகளை பெறுவதற்காக நகரங்களை நோக்கி வரும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும்வகையில் கிராமப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இ-சேவை மையங்களை ஏற்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதிவேக இணையதள வசதி கிடைப்பதன்மூலம் கிராமப்புற இ-சேவை மையங்களின் செயல்பா டுகள் வேகம்பெறும்.பணிகளை விரைந்து முடித்து விரைவில் வீடுகளுக்கு இணையதள இணைப்பு வழங்கவேண்டும் என கிராமப்புற மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிவேக இணையதள வசதி கிடைப்பதன்மூலம் கிராமப்புற இ-சேவை மையங்களின் செயல்பா டுகள் வேகம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • பிஏபி., பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • உடுமலை நகர பகுதிக்கு மட்டும் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பிஏபி., பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தளி கால்வாயை அடிப்படையாகக் கொண்டு உடுமலை,குடிமங்கலம்,கணக்கம்பாளையம், பூலாங்கிணர்,மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் மூலமாக உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.ஆனால் உடுமலை நகர பகுதிக்கு மட்டும் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.கிராமப்புறங்களில் வாரத்துக்கு இரண்டு முறை அதுவும் குறைந்த அளவு தண்ணீரே வழங்கப்படுகிறது.இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீரை பெற்று வருகின்றோம்.ஆனால் உடுமலை நகரத்தை போன்று கிராமப்புறத்திற்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து குடிதண்ணீரை வழங்குவதில்லை. கிராமத்தில் வாரம் இரண்டு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது.குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வந்தாலும் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.ஆனால் நகர்புறத்தில் நாள்தோறும் காலையில் தவறாமல் தண்ணீர் வந்து விடுகிறது. ஒரு சிலரைத்தவிர ஏராளமானோர் தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்தி வருவதுடன் கழிவுநீர் கால்வாயில் தண்ணீரை வீணடித்து வருகின்றனர்.அங்கு வீடுகளுக்கு மீட்டர் மாட்டி தண்ணீரை சேமிப்பதற்கும் கூடுதலாக வரி வசூல் செய்வதற்கும் அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் விலைமதிப்பற்ற தண்ணீரை நகரப்பகுதி மக்கள் யாருக்கும் பயன்படாத வகையில் செலவழித்து வருகின்றனர்.ஆனால் கிராமப்புறத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.அனைவரும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தவறாமல் வரி செலுத்தியும் வருகின்றோம். ஆனாலும் நாள்தோறும் தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை.எனவே உடுமலை நகர பகுதியை போன்று சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களுக்கும் நாள்தோறும் குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றை இழந்த 254 நபர்களுக்கு அவை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சி.சி.டி.வி. காமிராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இன்று நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மீட்பு அதிகம்

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றை இழந்த 254 நபர்களுக்கு அவை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு நடை பெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து 70 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான மீட்பு சதவீதமாகும்.

    தென் மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில்தான் சாலை விபத்துக்கள் குறைவாக நடந்துள்ளது. 2022 -ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணையை மீறியவர்கள் 48 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. காமிராக்கள்

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சி.சி.டி.வி. காமிராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கொலை, போக்சோ வழக்குகள், வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 நபர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    குட்கா பறிமுதல்

    2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர ரோந்து பணியின் அடிப்படையில் 182 கிலோ கஞ்சா, 30 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சாதி ரீதியிலான மோதல்களை தூண்டிய தாக 80 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் இந்த ஆண்டு 32 சதவீதம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 42 சதவீதம் குறைந்துள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    மாவட்ட போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் 16 கொலைகள் இந்த ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் புகாரில் ரூ. 13.50 லட்சம் மீட்கப்பட்டு 23 பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

    நில அபகரிப்பு வழக்கில் இந்த ஆண்டு ரூ.10 கோடி மதிப்பிலான 31 ஏக்கர் இடங்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு

    இந்த ஆண்டு போக்சோ வழக்கில் 8 பேருக்கும், கொலை வழக்கில் 2 பேருக்கும் நீதிமன்ற தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட் டத்தை ஒட்டி சுமார் 700 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், சைபர் கிரைம் டி.எஸ்.பி.ராஜூ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் கனரா வங்கியின் இலவச தொழிற்பயிற்சிக்கு கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் நபா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் ஆண்கள், பெண்களுக்கு இலவச சிசிடிவி கேமரா, தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியின் முடிவில் திறன் இந்தியா சான்றிதழும், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும். ஆகவே, பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். 

    • சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் அவிநாசி ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.
    • மருத்துவ பணியாளர்கள் தினமும் செல்லும் இடம், நேரம் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அவினாசி :

    அவிநாசி வட்டார சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் அவிநாசி ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இணை இயக்குனர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    இதில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்கள் தினமும் செல்லும் இடம், நேரம் குறித்து அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். வாத நோயால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கியுள்ளோருக்கும் தொடர் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் யோசனை தெரிவித்தனர்.

    டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக 5 கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தில் கொசு மருந்து தெளிப்பு உபகரணம் வாங்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ் ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் வட்டார அளவில் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் பங்கேற்றனர்.

    ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த மாதம் 28-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக மூடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி, கடந்த 21-ந் தேதி தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதில் ‘சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் ஒவ்வொன்றாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 815 மதுபானக்கடைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதற்கு மனுதாரர் கே.பாலு தரப்பில் ஆஜரான வக்கீல் பா.கருணாகரன் ஆட்சேபம் தெரிவித்தார். மே 21-ந் தேதி வெளியிட்ட அரசாணையை நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதன் மீது பதில் தாக்கல் செய்ய எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். தமிழக அரசு 815 மதுக்கடைகளை திறக்க அவசரம் காட்டுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகும் கூட இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ‘சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு மே 14 மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு மே 21-ந் தேதி வெளியிட்டுள்ள அரசாணை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனை தமிழக அரசு செயல்படுத்தலாம். இந்த அரசாணை குறித்து எதிர்மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின் மூலம் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ரத்து ஆகிறது. இதனால் தமிழக அரசால் அடையாளம் காணப்பட்ட ஊரகப்பகுதிகளில் அமைந்துள்ள 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×