என் மலர்
நீங்கள் தேடியது "voluntary retirement"
- இந்தச் சம்பவம் தனது குடும்பத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
- அவமானப்படுத்தும் நோக்கம் முதல்வருக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏசிபி) நாராயணா பரமணியை நோக்கி கர்நாடக முதல்வர் சித்தராமையா கை ஓங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி, நாராயணா பரமணி விருப்ப ஓய்வு கோரி கடிதம் அளித்திருந்தார். அரசு மற்றும் காவல்துறையிடம் இருந்து ஏற்பட்ட அவமானத்தையும், ஆதரவின்மையையும் இதற்கு காரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.
கன்னடத்தில் எழுதப்பட்ட மூன்று பக்க கடிதத்தில், இந்தச் சம்பவத்தால் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவமதிக்கப்பட்டதாகவும் உணர்வுபூர்வமாக விளக்கினார்.
"முதலமைச்சரை நான் நேருக்கு நேர் சந்திக்க விரும்பினேன்... ஆனால் பொதுவெளியில் அது ஏற்படுத்தும் தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்டு அதைத் தவிர்த்தேன்" என்று அவர் எழுதினார். இந்தச் சம்பவம் தனது குடும்பத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பரமணி தனது ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட செயல் என்றும், அவமானப்படுத்தும் நோக்கம் முதல்வருக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
- போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் கடந்த3.1.2023-ந் தேதி பொறுப்பேற்றார். இவர் ஓய்வு பெற கூடிய காலம் 31.5.2024-ந் தேதி ஆகும்.
ஆனால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்கான மனுவை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு விருப்ப ஓய்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 7 மணி அளவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலமாக தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் தன்னுடன் சிறப்பான முறையில்பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற் றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய்க்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.