என் மலர்
நீங்கள் தேடியது "பிளஸ்2 மாணவி"
- கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் மாணவியும், அவரது பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
- சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு தரப்பினரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.
மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள வக்கீல் புதுத்தெரு பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகள் பொன் ரூபிணி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள மீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு தனது பெரியம்மா செல்வராணியுடன் அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது அங்கு சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அருகில் சென்று அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் மாணவியும், அவரது பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் போலீஸ் ரோந்து வாகனத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த விளக்குத்தூண் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்த பணத்துடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரிபார்த்தபோது, அதில் ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது.
அந்த பணம் யாருடையது, எதற்காக சாலையில் வீசிச் சென்றார்கள், ஹவாலா பணமா அல்லது எங்கிருந்தாவது திருடி கொண்டு வரும்போது பயத்தில் அந்த இடத்தில் விட்டுச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மிகுந்த பொறுப்புணர்வுடன் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை போலீசாரை அழைத்து ஒப்படைத்த மாணவி பொன் ரூபிணிக்கும், அவரது பெரியம்மா செல்வராணிக்கும் போலீசார் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு தரப்பினரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.
- பி.காம் கட்-ஆப் குறைய வாய்ப்பு.
- நர்சிங், வேளாண்மை, கால்நடை, மீன்வள படிப்புகளுக்கு போட்டி அதிகரிக்கும்.
பிளஸ்-2 தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் வணிகவியல் பாடப்பிரிவு மதிப்பெண்களை விட அறிவியல் பாடங்களில் அதிகளவில் மதிப்பெண் பெற்று உள்ளனர்.
கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
வணிகவியல் பாடத்தில் கடந்த வருடம் 6,142 பேர் சென்டம் பெற்று இருந்த நிலையில் இந்த ஆண்டு 1,624 பேர் மட்டுமே வாங்கி உள்ளனர். இந்த ஏற்றுத் தாழ்வுதான் பி.காம் கட்-ஆப் குறைவுக்கான வாய்பை உருவாக்கி உள்ளது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட்-ஆப் அதிகரிக்கும். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதன் கட்-ஆப் கூடும் என்றும் இதனால் டாப் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு கடுமையான போட்டி இருக்கும் என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.
அண்ணா பல்கலைக் கழக வளாகக் கல்லூரிகள், பி.எஸ்.சி. தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு கடுமை யான போட்டி ஏற்படக் கூடும். 5 முதல் 10 கட்-ஆப் மதிப்பெண் வரை உயர்வ தற்கு வாய்ப்புள்ளது.
டாப் கல்லூரிகளில் கடந்த வருடம் பி.காம் படிப்பில் சேருவதற்கு 100 சதவீத கட்-ஆப் மார்க் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
தற்போது ஒன்று அல்லது 2 மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் தெரிவித்தார்.
என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் உயரும் நிலையில் வேளாண்மை, கால் நடை, மீன்வளம், வனத்துறை படிப்புகளுக்கான கட்-ஆப் ஒன்று அல்லது 3 மதிப்பெண் கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக பி.காம் பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் இந்த ஆண்டு சற்று குறையக்கூடும். அதே நேரத்தில் என்ஜினீயரிங் படிப்புக ளுக்கு மவுசு அதிகரித்து உள்ளது.
கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு இருப்பதால் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலை அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் உயர்கல்வியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
- மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை ஆசிரியர் கடத்திச் சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
- பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடன் மாணவி ஓட்டம் பிடித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வாரம் தனது 19-வது வயது பிறந்தநாளை சக மாணவிகளுடன் உற்சாகமாக கொண்டாடினார்.
பிறந்த நாள் கொண்டாடிய ஒரு சில தினத்தில் தோழியை பார்த்து வருவதாக வீட்டில் கூறி சென்ற மாணவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மாணவி படித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாயமான மாணவியின் தோழியிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
மாயமான மாணவிக்கும், 32 வயதான ஆங்கில ஆசிரியருக்கும் கடந்த சில மாதங்களாக காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததால், தங்கள் காதலை ரகசியமாக வைத்துள்ளனர். சமீபத்தில் மாணவிக்கு 19-வது வயது பிறந்து விட்டதால், அவர் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை ஆசிரியர் கடத்திச் சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது, மாயமான மாணவி, ஆசிரியருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை நாகர்கோவில் அழைத்துவர போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பயனாக மாணவியும் ஆசிரியரும் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் நிலையம் வந்த அவர்கள் மகளை பார்த்து கதறி அழுதனர். படிக்க வேண்டிய வயதில் திருமணம் வேண்டாம் என கூறினர். ஆனால் மாணவி அதனை கேட்கவில்லை. அவர் ஆசிரியருடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.
இதற்கிடையில் அவர்கள் 2 பேரும் மேஜர் என ஆசிரியரின் நண்பர்கள் பேசினர். இந்த நிலையில் ஆசிரியரின் பெற்றோரும் போலீஸ் நிலையம் வந்தனர். பின்னர் இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆசிரியர்-மாணவி திருமணத்தை நடத்துவது எனவும், திருமணம் நடக்கும் வரை மகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். இதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசாரிடம் எழுதி கொடுத்தனர். அதன்பிறகு மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடன் மாணவி ஓட்டம் பிடித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் கோவைக்கு வந்த அரவிந்தன் திருமண ஆசை காட்டி மாணவியை கடந்த 6-ந் தேதி கடத்தி சென்றார். மாணவியை அவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்.
பின்னர் அரவிந்தன் மாணவியுடன் அந்த பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அங்கு வைத்து மாணவியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து மாணவி செல்போன் மூலமாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தான் இருக்கும் இடத்தையும் கூறினார். உடனடியாக மாணவியின் பெற்றோர் அவர் தங்கி இருந்த இடத்துக்கு சென்று அவரை மீட்டனர். பின்னர் அரவிந்தனை நெகமம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் 17 வயது மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கற்பழித்த அரவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






