என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினியரிங் கட்-ஆப் மதிப்பெண்"

    • பி.காம் கட்-ஆப் குறைய வாய்ப்பு.
    • நர்சிங், வேளாண்மை, கால்நடை, மீன்வள படிப்புகளுக்கு போட்டி அதிகரிக்கும்.

    பிளஸ்-2 தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் வணிகவியல் பாடப்பிரிவு மதிப்பெண்களை விட அறிவியல் பாடங்களில் அதிகளவில் மதிப்பெண் பெற்று உள்ளனர்.

    கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

    வணிகவியல் பாடத்தில் கடந்த வருடம் 6,142 பேர் சென்டம் பெற்று இருந்த நிலையில் இந்த ஆண்டு 1,624 பேர் மட்டுமே வாங்கி உள்ளனர். இந்த ஏற்றுத் தாழ்வுதான் பி.காம் கட்-ஆப் குறைவுக்கான வாய்பை உருவாக்கி உள்ளது.

    பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட்-ஆப் அதிகரிக்கும். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதன் கட்-ஆப் கூடும் என்றும் இதனால் டாப் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு கடுமையான போட்டி இருக்கும் என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.

    அண்ணா பல்கலைக் கழக வளாகக் கல்லூரிகள், பி.எஸ்.சி. தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு கடுமை யான போட்டி ஏற்படக் கூடும். 5 முதல் 10 கட்-ஆப் மதிப்பெண் வரை உயர்வ தற்கு வாய்ப்புள்ளது.

    டாப் கல்லூரிகளில் கடந்த வருடம் பி.காம் படிப்பில் சேருவதற்கு 100 சதவீத கட்-ஆப் மார்க் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது ஒன்று அல்லது 2 மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் தெரிவித்தார்.

    என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் உயரும் நிலையில் வேளாண்மை, கால் நடை, மீன்வளம், வனத்துறை படிப்புகளுக்கான கட்-ஆப் ஒன்று அல்லது 3 மதிப்பெண் கூடும் என்று கருதப்படுகிறது.

    கடந்த சில வருடங்களாக பி.காம் பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் இந்த ஆண்டு சற்று குறையக்கூடும். அதே நேரத்தில் என்ஜினீயரிங் படிப்புக ளுக்கு மவுசு அதிகரித்து உள்ளது.

    கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு இருப்பதால் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கலை அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் உயர்கல்வியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    • கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

    கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

    பொது கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்குகிறது. 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர். அவர்களுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது.

    இதில் 65 மாணவர் கள் 200-க்கு 200 மதிப் பெண் பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டி லும் குறைவாகும்.

    அதேபோல 195 கட்-ஆப் மார்க்கிற்கு மேல் பெற்றவர் களின் எண்ணிக்கை 2,862 ஆகும். கடந்த ஆண்டு 2,911 பேர் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர். டாப் மார்க் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து இருப்பதாலும் டாப் கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.

    கட்-ஆப் மார்க் ஒன்று வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

    அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் கடந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. 4 வளாக கல்லூரிகளிலும் அனு மதிக்கப்பட்ட இடங்களில் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

    மருத்துவ கவுன்சிலிங் தேதி இதுவரையில் அறி விக்கப்படவில்லை. அதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2 லட்சம் மாணவர்கள் இதற்காக காத்திருக்க கூடிய நிலைமையை தவிர்க்கும் வகையில் கவுன்சிலங் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

    என்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி அண்ணா பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இ.சி.இ) படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தவிர 5 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அவர் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.

    ×