search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher arrested"

    • 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார்.
    • கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேல பொன் பேற்றியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் செண்டரையும் நடத்தி வந்தார். இந்நிலையில் அப்பள்ளி யில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூஷன் செண்டருக்குப் போன மாணவியிடம் ஆசிரி யர் கணேஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணேஷ்குமார் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, நெடுங்காடு போலீசார் கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இந்த நிலையில் கும்ப கோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஆசிரியர் கணேஷ்குமார் தலைமறை வாக இருந்தது போலீ சாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நெடுங்காடு சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் விரைந்து சென்று ஆசிரியர் கணேஷ் குமாரை கைது செய்தனர்.

    • கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    இதில் ஆசிரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதனையறிந்த ஆசிரியர் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்தியது.

    அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பைசல் மேச்சேரி மீது மாணவிகள் 5 பேர் புகார் கூறினர். அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பைசல் மேச்சேரியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர்.
    • மாணவன் சொன்ன தகவல் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    திருவனந்தபுரம்:

    நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியை, வேலியே பயிரை மேய்ந்த கதையாக டியூசனுக்கு வந்த மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டுள்ளான். சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள தேர்வுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான்.

    சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்த மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர்.

    அப்போது மாணவன் சொன்ன தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கடந்த சில நாட்களாக மாணவன், ஒரு ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றுள்ளான். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, அதனை மறந்து மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.

    மாணவன் கூறிய தகவலைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மண்ணுத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர்.

    • பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் செல்போனில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
    • குறுந்தகவல் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா கண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓலையம்பாடியை சேர்ந்த சஜீஷ் (வயது 38) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பரியாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சஜீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • டியூசனுக்கு சென்று விசாரித்தபோது ஆசிரியர் காந்தராஜின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • டியூசன் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுனை சேர்ந்த சுரேஷ்குமார்-அஸ்வினி தம்பதியின் மகள் திவ்யா (வயது10). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    பள்ளி முடிந்து தினமும் அதேப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான காந்தராஜ் (வயது 50) என்பவரிடம் டியூசன் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சிறுமி டியூசனுக்கு சென்றாள். இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் டியூசனுக்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது ஆசிரியர் காந்தராஜ் சிறுமி வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினார். இதனால் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் மலவள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டியூசனுக்கு சென்று விசாரித்தபோது ஆசிரியர் காந்தராஜின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த வேளையில் டியூசன் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டியூசன் ஆசிரியர் காந்தராஜிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    டியூசனுக்கு வந்த சிறுமியை ஆசிரியர் காந்தராஜ் சாக்லெட் தருவதாக கூறி அருகே உள்ள தனியார் கட்டிடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டார்.

    மேலும் நடந்த சம்பவத்தை சிறுமி வெளியே கூறி விடுவாள் என்று பயந்து மூச்சை திணறடித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு ஒன்று தெரியாததுபோல் இருந்துள்ளார்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த கொலையை கண்டித்து நேற்று மலவள்ளி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வகுப்பறையில் அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவ-மாணவிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கூறி மாற்று சான்றிதழ் பெற வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
    • ஆசிரியரின் மோசமான செய்கையால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணக்குப்பதிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கிறிஸ்துதாஸ்.

    இவர் வகுப்பறையில் ஆபாசமாக பேசுவதாக பிளஸ்-1 மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

    மேலும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்தும் புகார் கொடுத்தனர். அதில், ஆசிரியர் கிறிஸ்துதாஸ் பிளஸ்-1 வகுப்பறையில், மாணவ-மாணவியரிடம் சம்பந்தமில்லாத வகையில் ஆபாசமாக பேசி முகம் சுளிக்கும் வகையில் 'செக்ஸ்' பாடம் நடத்தி வருகிறார்.

    வகுப்பறையில் அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவ-மாணவிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கூறி மாற்று சான்றிதழ் பெற வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். ஆசிரியரின் மோசமான செய்கையால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் மாணவிகளின் பெற்றோர் கூறியிருந்தனர். இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து குளச்சல் மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    இதை தொடர்ந்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்துதாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆசிரியர் கிறிஸ்துதாஸ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

    • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 10 மாதங்களுக்கு பிறகு ஓய்வுபெற உள்ளார்

    கரூர்

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதை (வயது 59). இவர் தோகைமலை அருகே உள்ள பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்த தகவலின் பேரில், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, அறிவியல் ஆசிரியர் மருதை மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் ஆசிரியர் மருதை இன்னும் 10 மாதங்களுக்கு பிறகு ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார்.
    • பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தன்னிடம் படித்த 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து 'செக்ஸ்' தொல்லை கொடுத்தார். இதே போல் பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் 3 பேரும் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்கு செல்ல மறுத்தனர். இதுபற்றி பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் மணிமாறன் செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

    இதுபற்றி 3 மாணவிகளின் பெற்றோரும் ஆசிரியர் மணிமாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியில் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் மணிமாறன் 3 மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மணமாறன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூரில் மெழுகுவர்த்தியால் 4-ம் வகுப்பு மாணவனுக்கு சூடு வைத்ததது குறித்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளியின் 9 வயது மகன் கோல்டன் நகரில் உள்ள பாரத் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல மாணவன் தயாரானான். அப்போது அவனின் இரு கைகளிலும் தீக்காயம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர். உடனடியாக அவனிடம் விவரம் கேட்டனர்.

    அப்போது அவன், பள்ளி ஆசிரியை தன்னை மெழுகுவர்த்தியால் சூடுவைத்ததாக பெற்றோரிடம் கூறினான். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் தனது மகனுடன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்து புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பள்ளியில் 4-ம் வகுப்பு ஆசிரியையாக உள்ள ரம்யா(வயது 22) அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் மாணவன், வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் நோட்டுகளை வாங்கி பார்த்த ரம்யா, கோபத்தில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து, உருகிய மெழுகை மாணவனின் கைகளில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார், ஆசிரியை ரம்யா மீது சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். ரம்யா அந்த பள்ளி தாளாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சூடுவைத்ததால் காயம் அடைந்த மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    பழனி அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி முல்லைநகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது45). இவர் கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பழனி சட்டப்பணிகள் குழுவிற்கு புகார் அனுப்பப்பட்டது. இதனைதொடர்ந்து சட்டப்பணிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    ஆசிரியர் ஸ்டீபன்ராஜ் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் ஸ்டீபன்ராஜ் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் பழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

    பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    செங்கம்:

    செங்கம் மேல்நாச்சிபட்டு அரசுப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, நேற்று பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் ஆசிரியரை அடித்து உதைத்தனர்.

    அப்போது, ஆசிரியரை விட்டு விடுமாறு மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறினர்.

    இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் கண்ணனை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கண்ணக்குருக்கை- மேல்நாச்சிப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    ×