என் மலர்
நீங்கள் தேடியது "tailor arrested"
- பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.
பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல்லடம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் சவுந்திரபாண்டி(வயது 27). இவர் கடந்த 3 வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து சின்னக்கரையில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் சவுந்திரபாண்டிக்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இந்த சமயத்தில் சவுந்திரபாண்டி திருமணம் செய்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.
பின்னர் கடந்த 2 மாங்களுக்கு முன்பு சவுந்திரபாண்டி ஊருக்கு சென்றார். மீண்டும் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி மயங்கி கீழே விழுந்தார். அவரை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் சவுந்திரபாண்டியுடன் பழகியதால் கர்ப்பமானதாக கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சவுந்திரபாண்டியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிறுமியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் ஊருக்கு சென்ற சவுந்திரபாண்டி சிறுமியிடம் பழகியதை மறைத்து கடந்த 9-ந் தேதி உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சவுந்திரபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






