என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பளம் உயர்வு"

    • நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர்.
    • ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 88 லட்சத்து 16 ஆயிரத்து 448 பேர் உள்ளனர்.

    மேலும் இந்த தொழிலாளர்களுக்கு, அந்த மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 2025-26-ம் நிதியாண்டிற்கான சம்பளத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி தமிழகத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.17 கூடியிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கடந்தாண்டு மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.2,900 கோடி ஒதுக்கியது. அதில் சம்பளம் போக, பொருட்கள் வாங்கியதற்கு வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை நிலுவை வைத்து உள்ளது.

    அதேபோல பல்வேறு மாநிலங்களுக்கும் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் விரைவில் இந்த தொகை விடுவிக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தாண்டு தமிழகத்துக்கு முதல்கட்டமாக சம்பளத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடக்கத்தக்கது.

    • தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 1.20 லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாதமே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • புதிய சம்பள விகிதம் கணக்கிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடந்தது.

    அப்போது தொழிற்சங்கங்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இறுதி கட்ட பேச்சுவார்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கையெழுத்திட்டனர்.

    4 ஆண்டு காலத்திற்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வு பலன் ரூ.1000 ஆக வழங்கப்படுகிறது. மகளிர் இலவச பேருந்தில் ஏற்படும் வருவாய் குறைவினால், டிரைவர், கண்டக்டர்களுக்கு வசூல் படியில் ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்யப்படுகிறது.

    குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுவது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    2 வருடமாக நீடித்து வந்த ஊதிய உயர்வு ஒப்பந்த பிரச்சினை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று முன்தினம் இறுதி செய்யப்பட்டதையடுத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தொழிலாளர்களுக்கு பே-மெட்ரிக்ஸ் முறையில் புதிய ஊதிய விகிதம் கணக்கிடப்படுவதால் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அதிகபட்சமாக 7 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 1.20 லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாதமே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய சம்பள விகிதம் கணக்கிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஊதிய உயர்வு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் அவரவர் பணிக்காலத்தையொட்டி மாறுபடும். ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக சலுகைகள் கிடைக்க உள்ளன.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் மாத சம்பளம் உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    8 அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு ஊழியர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

    ×