என் மலர்
நீங்கள் தேடியது "100 day workers"
- நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர்.
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 88 லட்சத்து 16 ஆயிரத்து 448 பேர் உள்ளனர்.
மேலும் இந்த தொழிலாளர்களுக்கு, அந்த மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 2025-26-ம் நிதியாண்டிற்கான சம்பளத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.17 கூடியிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கடந்தாண்டு மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.2,900 கோடி ஒதுக்கியது. அதில் சம்பளம் போக, பொருட்கள் வாங்கியதற்கு வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை நிலுவை வைத்து உள்ளது.
அதேபோல பல்வேறு மாநிலங்களுக்கும் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் விரைவில் இந்த தொகை விடுவிக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தாண்டு தமிழகத்துக்கு முதல்கட்டமாக சம்பளத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடக்கத்தக்கது.
- குரான் பானளயத்திலுள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர்.
- 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சேஷாங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரான்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வேலை செய்த 9 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதை கண்டித்தும், அனை வருக்கும் ஜாப் கார்டு வழங்க கோரியும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மற்றும் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.க






