search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை அருகே மகள்களுடன் தாய் தற்கொலை வழக்கு-ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றம்
    X

    புதுக்கோட்டை அருகே மகள்களுடன் தாய் தற்கொலை வழக்கு-ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றம்

    • புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கு ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
    • கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சன்விடுதி யைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரிக்கண்ணு (வயது 40). கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர்.

    அதில் ஒருவர் அரிமளத்தில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். தாயுடன் வசித்து வந்த இருவரும் அரசுப் பள்ளிகளில் முறையே பிளஸ்-2 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்நிலையில், சித்தன்னவாசல் அருகே உள்ள கல்குவாரி பள்ளத்தில் குதித்து மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரும் ஜூலை 3-ந்தேதி தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் மாரிக்கண்ணுடன் மாஞ்சன் விடுதியை சேர்ந்த கருப்பையா (36) கூடா நட்பு வைத்திருந்ததோடு அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் வாங்கிக்கொண்டு கொடுக்க மறுத்து வந்ததுடன் அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு ஆலங்குடி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×