என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rapper"

    • கிரிஸ் வூ 32 வயதான ராப் பாடகர்.
    • சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.

    பீஜிங்

    கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.

    இந்த நிலையில் சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிரிஸ் வூ என்கிற 32 வயதான ராப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.

    தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வந்தது. நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இந்த விவகாரம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பூலியோ தங்கி இருந்தார்.
    • ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பூலியோ என்ற சார்லஸ் ஜோன்ஸ் (வயது 26). பிரபல ராப் பாடகரான இவரை சமூகவலைதளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இதற்காக புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பூலியோ ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ராப் பாடகரான பூலியோ கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

    • தனது மனைவியால் அபினவ் சிங் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    • பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

    ஒடியா பாடகர் அபினவ் சிங் (32) பெங்களூரில் அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    அபினவ் சிங் மீது அவரது மனைவி பொய்யான குற்றசாட்டுகளை கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×