என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT Student"

    • ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது
    • 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    உயிரிழந்த மாணவர் அங்கு புவி அறிவியலில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்த ராஜஸ்தானை சேர்ந்த ராமஸ்வரூப் இஷ்வாராம் (25) என அடையாளம் காணப்பட்டார்.

    அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

    முன்னதாக இதே வளாகத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பி டெக் மாணவர் ஜே சிங் மீனா கடந்த டிசம்பர் 29 அன்று தற்கொலை செய்த நிலையில் தற்போது மற்றோரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டிகளில் 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 முதல் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய குற்றவியல் ஆவண காப்பக தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 36 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    மன அழுத்தம், கல்விக் கட்டண சுமை, சாதி பாகுபாடு ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன.

    இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் கடந்த 5 ஆண்டுகளில் சாதி பாகுபாடு புகார்கள் 118% அதிகரித்துள்ளதாக UGC அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    2016-ஆம் ஆண்டு சாதிய பாகுபாட்டால் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் UGC இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தது.  

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.ஐ.டி. கான்பூர் என்ற தொழிற் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளது.
    • 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.

    ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

    1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது. நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

    அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார். போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.

    இது கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள். 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

    • ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
    • சீண்டல் எல்லை மீறி போனதால் மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

    சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று பொங்கல் பண்டிகையை யொட்டி அவர் கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்கு உடன் படித்து வரும் நண்பருடன் டீ குடிப்பதற்காக சென்றார்.

    அப்போது அங்கு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது சீண்டல் எல்லை மீறி போனதால் அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து போலீசார் பேக்கரி கடைக்கு விரைந்து வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது பெயர் ஸ்ரீராம் (29). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மாணவியின் புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நேற்று மாலை 5.30 மணியளவில், ஒரு டீக்கடையில், சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் வந்த மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வளாகத்திற்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐ.ஐ.டி.யுடன் எந்த தொடர்பும் இல்லை.

    சென்னை ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மாணவிகள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கான்பூர்:

    உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) புவி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி செஜல் ஜெயின். இவர் தனது நண்பர்களுடன் நேற்று கங்கை தடுப்பனைக்கு சென்றுள்ளார். அங்கு, செஜல் ஜெயின் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த ஐஐடி மாணவி செஜல் ஜெயின்

    இதுகுறித்து ஐ.ஐ.டி-கே செய்தித் தொடர்பாளர் கிரீஷ் பந்த் கூறுகையில், " மாணவி உயிரிழந்தது குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், செஜல் ஜெயின் உள்பட 7 பேர் கங்கை தடுப்பணைக்கு சென்றது தெரியவந்தது. இவர்கள் அங்குள்ள பாலத்தின் பாதுகாப்பு தடுப்பை கடந்து அணையின் கேட் வளைவில் நுழைந்துள்ளனர்.

    அங்கு, செஜல் ஜெயின் தனியாக நின்றபடி செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென செஜல் ஜெயின் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் ஆற்றுக்குள் சுயநினைவற்று கிடந்த செஜல் ஜெயினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் செஜல் ஜெயின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் " என்றார்.

    இதையும் படியுங்கள்.. இந்தியாவிலேயே முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு

    சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த ரிஷீக் ரெட்டி மாயமானதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து மாணவனை தேடி வருகிறார்கள். #StudentMissing
    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வருபவர் ரிஷீக் ரெட்டி.

    இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரிஷீக் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிஷீக் ரெட்டியின் தந்தை பிரபாகர் ரெட்டி அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஐ.ஐ.டியில் இருந்து புறப்பட்டு சென்ற ரிஷீக் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரிஷீக்கின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள். அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காதல் பிரச்சினை காரணமாக அவர் காணாமல் போனாரா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #StudentMissing
     
    ×