என் மலர்
நீங்கள் தேடியது "கட்டாயம்"
- சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
- ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், "சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்" என்றார்.
உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுபடி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் (Shloka of the Week) தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவாதிக்கப்படும், மேலும் மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அம்மாநில கல்வித்துறைகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, "ராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் நமது மூதாதையர்கள், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்" என்று கூறியுள்ளார்.
- பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும்.
- கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
காங்கயம்:
தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும். சில நேரங்களில் இந்த உரங்களுக்கான தட்டுப்பாடு இருக்கும். ஆனால் அதைச்சார்ந்து வேறு பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இணை உரப்பிரச்சினை பாடாய்படுத்துகிறது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்ற விவசாயிகளிடம், விற்பனையாளர்கள் டி.ஏ.பி. ஒரு மூட்டை வேண்டுமெனில் அதே கம்பெனியின் மற்றொரு உரம் ஒரு மூட்டை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கினர்.
இதனால் ஆங்காங்கே விவசாயிகள் உரவிற்பனைக் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினர். அத்துடன் இதுபற்றிய தகவல் வேளாண்மை துறைக்கு தெரிவிக்கப்பட்டு வேளாண்துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி எச்சரிக்கை செய்து வந்தனர்.
குறிப்பாக வெங்காய சாகுபடி சீசன், மக்காச்சோள சாகுபடி சீசன் தொடங்கிவிட்டால் போதும் இந்த பிரச்சினையும் தொடங்கிவிடும்.
காங்கயம், தாராபுரம், குண்டடம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பொன்னாபுரம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி. அமராவதி தண்ணீரைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர். மக்காச்சோளத்திற்கு முதல் உரமாக யூரியா கொடுப்பது வழக்கமாக உள்ளது.
இதனால் அடுத்த மாதம் தொடங்கி யூரியாவின் தேவை அதிகரிக்கும். அப்போது இந்த இணை உரப்பிரச்சினையை உரநிறுவனங்கள் தொடங்கி விடுவர். அதே போல அடுத்த சில மாதங்களில் வெங்காயம் சாகுபடி தொடங்கும் நேரத்தில் டி.ஏ.பி.யின் தேவை அதிகரிக்கும். அப்போதும் இந்த பிரச்சினை தொடங்கிவிடும்.
இது பற்றி விவசாயிகள் கூறுகையில்,கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு அதிகாரிகள் முன்னதாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக உர விற்பனையாளர்கள் கூறுகையில் ,நாங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இல்லையெனில் ஸ்டாக் தர மறுக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி அந்த உரங்களை வாங்க வேண்டி உள்ளது.
அதனால் வேளாண்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உரவிற்பனையாளர்கள், விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றனர்.
- தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இந்த வகை நோய் தாக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதன் மூலமாக, அவற்றின் எச்சில் வழியே மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பரவுகிறது.
இந்தியாவில் பெரும்பாலும் நாய்களின் மூலமே மனிதர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ஆகவே செல்லப்பி ராணிகளுக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு, கட்டாயம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
ஒருவரை நாய் கடித்து விட்டாலோ, நகத்தினால் கீறி விட்டாலோ, கையை கட்டு கட்டவோ, எருகம்பால் விடுவது அல்லது மந்திரி ப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. கடிபட்ட இடத்தை 15 நிமிடங்கள் குழாய் நீரிலோ அல்லது சோப்பு போட்டோ கழுவ வேண்டும்.
உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரிடம் கலந்தா லோசித்து தேவைப்பட்டால் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தன்று அனைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் ஒருங்கிணைந்த நலத்தோடு, வெறிநாய் கடிநோயினால் இறப்பு இல்லா சமுதாயம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
- கடந்த 1-ந் தேதி முதல் ஹெல்மட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- 1-ந் தேதி ெஹல்மட் அணியாமல் வந்த 2 ஆயிரத்து 992 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபாராத தொகையாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த 1-ந் தேதி முதல் ஹெல்மட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முக்கிய சந்திப்புகளில் வாக–னங்களை தடுத்து நிறுத்தும் போலீசார் ஹெல்மட் அணியதவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
அதன்படி கடந்த 1-ந் தேதி ெஹல்மட் அணியாமல் வந்த 2 ஆயிரத்து 992 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபாராத தொகையாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
2-வது நாளான நேற்று 2 ஆயிரத்து 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணியாமல் சென்று வருகின்றனர். இதனால் சாலை விபத்துகளின்போது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.அதேபோல கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் பயணிந்து வருகின்றனர்.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ெஹல்மெட் அணிவது வருகிற 1-ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா கூறியிருப்பதாவது:-
வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் ெஹல்மெட் அணிந்து விபத்தை தடுத்திட போலீஸ் துறைக்கு ஒத்துைழப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.






