என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhagavad Gita"

    • சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
    • ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், "சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்" என்றார்.

    உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுபடி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.

    இதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் (Shloka of the Week) தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவாதிக்கப்படும், மேலும் மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

    இந்த நடவடிக்கைக்கு அம்மாநில கல்வித்துறைகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, "ராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் நமது மூதாதையர்கள், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்" என்று கூறியுள்ளார். 

    • ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
    • கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.

    இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.

    • மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம், பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும்.
    • வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்

    உத்தரகாண்டில் உள்ள 7,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யை ஆம்மாநில பாஜக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் மானவர்கள் தினமும் ராமாயணம் மற்றும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அந்த உத்தரவில், "மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம் மற்றும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும். வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரகாண்டின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின குழந்தைகளை கட்டாயப்படுத்தி ராமாயணம், பகவத் கீதை கூற சொல்வது கொடுமையானது என்று இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    • அரியானாவின் குருஷேத்ராவில் ஆண்டுதோறும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது.
    • இதில் பங்கேற்ற உள்துறை மந்திரி பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது என்றார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் குருஷேத்ராவில் ஒவ்வொரு ஆண்டும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த விழா வரும் 24-ம் தேதி நிறைவடைகிறது.

    இந்நிலையில், பகவத் கீதை மகா உற்சவ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:

    வருடாந்திர சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். அதனை கடந்த 2016 முதல் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் நிறைவேற்றிக் காட்டி வருகிறார்.

    பகவத் கீதையின் போதனைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைய வேண்டும்.

    கடந்த 2016 முதல் பகவத் கீதை மகா உற்சவம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார்.

    • தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.

    டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.

    இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.

    ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.

    மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.

    இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.

    சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.

    • பொது தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.
    • தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.

    தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இது வரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள்.

    லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா (வயது 29) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.

    1987 -ம் ஆண்டு முதல் லீ செஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இதனை தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
    • உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களில் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வருகிற 20-ந்தேதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

    இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இதில் கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றுள்ளார்.

    இதனை காண்பதற்காக அவருடைய தாயார் நேரில் சென்றார். இதுபற்றி சுப்ரமணியம் கூறும்போது, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விர்ஜீனியாவில் இருந்து உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்து கொண்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி மற்றும் தெற்காசிய உறுப்பினராக என்னுடைய தாயார் பெருமை பொங்க என்னை பார்த்தார்.

    உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார். ஆனால், விர்ஜீனியாவின் முதல் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். இது நிச்சயம் கடைசி அல்ல. இதற்காக நான் அதிக பெருமை கொள்கிறேன் என சுப்ரமணியம் கூறினார்.

    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும்.
    எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.



    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.

    கீதாச்சாரம்

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய்,
    அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ,
    அது நாளை மற்றொருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும்.
    எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.

    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.

    கீதாச்சாரம்

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய்,
    அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ,
    அது நாளை மற்றொருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
    பகவத் கீதை படியுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். மிக எளிதாக புண்ணியத்தை சேர்த்து முக்தி பாதைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.
    பகவத் கீதை எந்த கால கட்டத்தில் தோன்றியது என்பதில் ஆராய்ச்சியாளர்களிடம் மாறுபட்ட கருத்து இருந்தாலும் அது அவதரித்த தினத்தில் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள். எனவே நாளை 18-ந்தேதி பகவத் கீதைக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. பகவத் கீதை ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான நூல் ஆகும். பகவத் கீதை இருந்தால் உலகமே உங்கள் பக்கம் இருக்கும் பலம் வந்துவிடும்.

    இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பகவத் கீதை என்பதற்கு, “கடவுளின் பாடல்கள்” என்று அர்த்தம் ஆகும். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது எது தெரியுமா? மகாபாரதப் போர். இந்த போர் எப்போது, எப்படி, யார்-யாருக்கு இடையே நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் “பகவத்கீதை” பிறந்த சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    அஸ்தினாபுரம் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை குரு குலத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த குலத்தில் பிறந்த அண்ணன்-தம்பியான திருதராஷ்டிரனுக்கும் பாண்டு வுக்கும் இடையே ஆட்சியை யார் நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

    பிறவிக் குருடரான திருதராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் துரியோதனன், துச்சாதனன் என 100 மகன்கள் பிறந்தனர். இவர்கள் கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
    பாண்டுவுக்கு குந்தி மூலம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என 5 மகன்கள் பிறந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்த 5 பேருக்கும் பொதுவான ஒரே மனைவியாக திரவுபதி இருந்தார்.

    துரியோதனனுக்கும், தர்மனுக்கும் இடையில் அடுத்து ஆட்சி செய்வது யார் என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது சகுனி செய்த சூழ்ச்சியால் சூதாட்டத்தில் நாட்டையும், மனைவியையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. 12 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி உரிமையை கேட்டனர். ஆட்சியைக் கொடுக்க துரியோதனன் மறுத்தான். இதையடுத்து இருவரும் போருக்குத் தயாரானார்கள்.

    இருவருக்கும் பொது வானவராக இருந்தவர் கிருஷ்ணர். அதாவது இரு தரப்பினருக்குமே அவர் மாமா உறவில் வருபவர். அந்த உரிமையில் துரியோதனன், தர்மர் இருவரும் அவரிடம் சென்று போரில் தங்களுக்கு உதவுமாறு கேட்டனர்.

    அவர்களிடம் கிருஷ்ணர், “நான் மட்டும் வேண்டுமா? அல்லது லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட எனது படை வேண்டுமா? என்று கேட்டார்.

    துரியோதனன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. “லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட படைகளை தந்தாலே போதும்” என்றான். பஞ்ச பாண்டவர்களோ, தங்களுக்கு “பரமாத்மாவான கிருஷ்ணர் மட்டும் உதவியாக வந்தால் போதும்” என்றனர்.

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரத போர் தொடங்கியது. மொத்தம் 18 நாட்கள் போர் நடந்தது. இந்த போரின்போது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக நிற்பவர்களை பார்த்தான். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்த்து போர் புரிய அர்ச்சுனனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.

    சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று மிகவும் யோசித்தார். அவரது மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாமா? என்று கூட அர்ச்சுனன் மனம் நினைத்தது.

    அப்போது அவருக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். “தர்மத்துக் காக போர் செய்யும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலில் நிறைய தத்துவங்கள், யோகங்கள், விளக்கங்கள் இடம் பெற்று இருந்தன.

    அந்த உரையாடல் தொகுப்பே பகவத் கீதையாகும்.

    அர்ச்சுனனின் சோர்ந்து போன மனத்தை சுறுசுறுப்பாக்கும் வகையில் கிருஷ்ணரின் உபதேசங்கள் இருந்தன. போர் களத்தில் பிறந்த இந்த உபதேசங்கள் சாதாரண மானவை அல்ல. ஒவ்வொருவரது வாழ்க்கையோடும் பின்னி பிணைந்தவை. எனவேதான் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு உபதேசத்தையும், கோட்பாடுகளையும் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்த கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    யார் ஒருவர் பகவத் கீதை வழி நடக்கிறார்களோ அவர்களது ஆன்மா மேம்படும். சகல துக்கங்களில் இருந்தும் அவர்களால் மிக எளிதாக விலக முடியும். இதுதான் பகவத் கீதைக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பாகும். உண்மையில் பகவத் கீதையின் உண்மையான கருத்து என்பது, “காமம், குரோதம், சோம்பல், ஆணவம், சந்தேகம், கவலை போன்றவற்றை நீக்கி ஆன்மிகத்தை அடைய வேண்டும்” என்பதே ஆகும்.

    மொத்தம் 18 அத்தியாயங்களை கொண்ட பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஸ்ரீகிருஷ்ணர் கூறிய வேதாந்த பார்வை, சுயதர்ம பார்வை, தர்ம யோக பார்வை, பக்தி யோக பார்வை, ஞானயோக பார்வை ஆகிய ஐந்தும் மிக முக்கியமானது ஆகும்.

    இதில் வேதாந்த பார்வையில், “ஆத்மா என்பது அழியாதது. அதை யாராலும் அழிக்க முடியாது. நீ அழிக்கப் போவது உடம்பைத்தான்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த ஒரே தத்துவத்தின் அடிப்படையில்தான் முழு கீதையும் செயல்படுகிறது.

    கிருஷ்ணரின் போதனைகள் வாழ்நாள் முழுவதற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. குறிப்பாக கீதாச்சாரம் ஒன்றே போதும், நமது மனதை பக்குவப்படுத்த. இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    மகாபாரத போர் நடந்த இடம்தான் பகவத் கீதை பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த போருக்கு குருஷேத்திர போர் என்ற பெயரும் உண்டு. மகாபாரதப் போர் நடந்த பெருமைக்குரிய அந்த இடம் அரியானா மாநிலம் குருஷேத்திரா மாவட்டத்தில் உள்ளது.

    இந்த இடம் சண்டிகர் நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பரதகுலத்தில் பிறந்த குரு எனும் அரசன் இந்த தலத்தில் தவம் இருந்து சிறப்பு பெற்றான். இதனால் அந்த இடம் அந்த அரசனின் பெயராலேயே குருஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

    பகவத் கீதையின் தாயக மாக திகழும் குருஷேத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் “பகவத் கீதை ஜெயந்தி விழா” பிரமாண்டமாக கொண் டாடப்பட்டு வருகிறது.
    இந்த ஆண்டுக்கான விழா நாளை 18-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.
    குருஷேத்திரம் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. அதில் முக்கியமானது பிரம்ம சரோவர் புனித குளம் ஆகும். இது இந்தியாவில் பழமை வாய்ந்த மிகப்பெரிய புனித குளமாக கருதப்படுகிறது.

    அந்த புனித குளத்தில் நீராடினால் உடலும் உள்ளமும் சக்தி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த புனித குளத்தை உருவாக்கியவர் பிரம்மா ஆவார். மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திய பிறகு அவர் இந்த குளத்தை உருவாக்கியதாக புராணங்களில் குறிப்பிடப்படப் பட்டுள்ளது.

    ஜோதிசர்:- இது அர்ச்சு னனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம். இந்த இடம் குருச்சேத்திரம் மாவட்டத்தில் குருச்சேத்திரம்- பெஹோவா சாலையையட்டி அமைந்துள்ளது. குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

    இந்த இடத்தின் முழு பெயர் ஜோதிசர் தீர்த் என்பதாகும். இந்த இடத்தில்தான் அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை கிருஷ்ணர் உபதேசித்தார். இந்த இடத்தில்தான் அர்ச்சுனன் உற்சாகம் பெற்றார்.

    அங்குள்ள பெரிய ஆலமரத்தின் அடியில்தான் கீதா உபதேசம் நடந்ததாக சொல்கிறார்கள். அந்த ஆலமரம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அந்த ஆலமரத்தை புனிதமாக கருதி கம்பிவேலி போட்டு பாதுகாத்து வருகிறார்கள். அந்த மரத்திற்கு கீழ் கிருஷ்ணரின் பாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் கீதா உபதேச சிலை கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. அருகில் தீர்த்தமும் இருக்கிறது. கிரகணங்களின்போது இந்த தீர்த்தத்தில் பொதுமக்கள் நீராடி பித்ருதர்பணம் செய்து விட்டு செல்வார்கள்.

    இந்த தீர்த்தக் கரையோரம் அமர்ந்து பகவத் கீதை படிப்பது மிகுந்த பலன்களை தரும் என்பது மக்களிடம் நம்பிக்கையாக உள்ளது. இதே பகுதியில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் ஆலயம் உள்ளது. பீஷ்மரை சுற்றி பாண்டவர்கள் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் அந்த பகுதியில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    குருசேத்திர பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் வருமாறு:-

    * பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய ரதம் உள்ளது.
    * கிருஷ்ணா அருங்காட்சியகம்:- மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம்.
    * பீஷ்ம குண்டம்:- இது பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்.
    * பிரம்ம குண்டம்:- இது அர்ச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
    * குருஷேத்திர அறிவியல் அருங்காட்சியகம்.

    இந்த தலத்தில் பகவத் கீதைக்கு ஆண்டு தோறும் விழா எடுக்கும் சமயத்தில் நாடு முழுவதும் பகவத் கீதை பிறந்த தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பகவத் கீதை படியுங்கள். விஷ்ணுசகஸ்ரநாமம் கேளுங்கள். மிக எளிதாக புண்ணியத்தை சேர்த்து முக்தி பாதைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.

    பகவத் கீதை புத்தகம் தானம் செய்யுங்கள்

    எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.

    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.

    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது.
    பாண்டவர்களுக்கு குண்டூசி அளவு நிலம் கூட தர முடியாது என்று கூறியதன் விளைவாக, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் மூண்டது. 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரை ‘குருசேத்திரப் போர்’ என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது.

    இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பாக, போர்க்களத்தில் தனது உறவினர்களை எதிர்த்து போரிட அர்ச்சுனன் விரும்பவில்லை. அப்பொழுது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பகவான், கர்ம வினைகளை பற்றி எடுத்துரைத்து அர்ச்சுனனை போருக்கு தயாராக்கினார்.

    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது. இது 18 பகுதிகளையும், 650 செய்யுள்களையும் கொண்டது.
    வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது தான் பகவத் கீதையில் தத்துவமாகும்.
    பகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் ‘இறைவன்’. ‘கீதா’ என்றால் ‘நல்ல உபதேசம்’. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள்.

    வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது இதன் தத்துவமாகும். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் ‘கீதா’விற்குரிய ஆழமான பொருளாகும்.

    அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, ‘தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் என்னையே சேரும்’ என்று பகவான் கிருஷ்ணர் கூறினார்.

    எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.
    ×