என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - போலீசார் விசாரணை
- பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15). இவர் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் முத்துகிருஷ்ணன் நேற்று இரவு வீட்டில் பின்புறம் உள்ள ஆஸ்பெடாஸ் சீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், எனது சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என 4 ஆசிரியர்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






