என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bus driver arrested"
- முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சை ஓட்டுனராக செல்வம் தேக்கம்பட்டிக்கு ஓட்டி சென்றார்.
பின்னர் மீண்டும் சேலம் பஸ் நிலையம் வருவதற்காக தேக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை திருப்பிக் கொண்டிருந்தார்.
தேக்கம்பட்டி அருகே உள்ள காட்டுவளவு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.
இந்த திடீர் தாக்குதால் காயம் அடைந்த செல்வம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயராகவனை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட விஜயராகவன் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
- இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
ஈரோடு:
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(32). இவர் ஈரோடு-மொடக்குறிச்சி வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வந்தார்.
அப்போது அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி அவரது பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரமேஷ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் ரமேஷ் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தா.பேட்டை:
திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வி(வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தையும் அந்த பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சின்னையா(56) என்பவரும் நண்பர்கள். இதனால் சின்னையா அடிக்கடி செல்வி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் சின்னையா உல்லாசம் அனுபவித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த செல்வி திடீரென மயக்கமடையவே, அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது செல்வி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது பற்றி விசாரிக்கும் போது, சின்னையா, செல்வியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சின்னையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்