என் மலர்
நீங்கள் தேடியது "pregnant girl"
- ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 17 வயது.அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் வாலிபர் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
வாலிபர் உடன் நெருக்கமாக இருந்ததால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது வாலிபருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ராணுவத்தில் பணிபுரியும் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கே.முத்துச்சாமி புரத்தை சேர்ந்தவர் வீரபாண்டி- அமுதா தம்பதியின் 17 வயது மகனுக்கும் மாரியப்பன்- சுப்பம்மாள் தம்பதியின் 15 வயது மகளுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் சிறுமி கர்ப்பமுற்ற நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த 6-ந் தேதி சிறுமிக்கு கரு கலைப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவந்ததும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தி மாவட்ட சமூக நல அதிகாரி ராஜத்திற்கு தகவல் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சாத்தூர் யூனியன் விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வைத்த தாக சிறுமியின் பெற்றோர் மாரியப்பன்- சுப்பம்மாள், சிறுவனின் பெற்றோர் வீரப்பாண்டி- அமுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தா.பேட்டை:
திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வி(வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தையும் அந்த பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சின்னையா(56) என்பவரும் நண்பர்கள். இதனால் சின்னையா அடிக்கடி செல்வி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் சின்னையா உல்லாசம் அனுபவித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த செல்வி திடீரென மயக்கமடையவே, அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது செல்வி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது பற்றி விசாரிக்கும் போது, சின்னையா, செல்வியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சின்னையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.






