என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
    X

    காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

    • இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    வேலூரை சேர்ந்ததாக கூறப்படும் இளம்பெண் தனது காதலனுடன் ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் பண்ணை பகுதிக்கு நேற்று இரவு வந்ததாக கூறப்படுகிறது.

    அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அவரகரையை சேர்ந்த 3 பேர் காதலர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் நகை, பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து இளம்பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.

    பின்னர் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக அந்த இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×