search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது
    X

    மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது

    • தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார்.
    • சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாகோட்டையை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகள் சகாயமேரி (வயது 61 ). திருமணமாகவில்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சகாயத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்வையிட்டனர். அதில் சகாயமேரியின் தலையில் ரத்த காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சந்தேகம் மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.அதில் தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி தென்கரையை சேர்ந்த சாஸ்திரி (30) என்பவர் சம்பவத்தன்று புதிய நீதிமன்றம் அருகே நின்று கொண்டிருந்த சகாய மேரியை கற்பழித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சகாயமேரி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சாஸ்திரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‌

    Next Story
    ×