என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
- இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.
- பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் கரி வலம்வந்தநல்லூர் அருகே உள்ள கீழவயலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார்.
அதே மில்லில் வேலை செய்து வந்த குவளைக் கண்ணியை சேர்ந்த துரை என்ற ரஞ்சித் ( வயது 25) என்பவர் அந்த பெண்ணிடம், தான் 4 மாதமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து சுப்புலாபுரத்தில் பணியாளர்களை இறக்கி விட்டபோது அந்த பெண்ணிடம் சென்று துரை நான் உன்னை காதலிப்பதாக கூறுகிறேன். நீ ஒன்றும் பதில் சொல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாக்குதல்
இதுகுறித்து வேன் டிரைவர் குருசாமி மற்றும் கிளீனர் பாலமுருகன் ஆகியோர் துரையை தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த துரை அருகில் இருந்த கம்பியை எடுத்து அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வேன் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்ற தாகவும் கூறப்படு கிறது.
மேலும் வேனில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து அந்த பெண்ணிடம் என்னை காதலிக்க வேண்டும் என சொல்லி தனக்குத்தானே கையை கிழித்து கொண்ட தாகவும் தெரிகிறது.
இதில் முட்டியில் காயமடைந்த அந்த இளம்பெண் மற்றும் துரை ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த வேன் டிரைவர் குருசாமி, கிளினர் பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்