என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Newly married woman"
- மணிமேகலை கடும் வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
- 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 32) என்பவருக்கும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அருகே உள்ள வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமேகலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதனை யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). இவர் ஓட்டல் நடத்தி வருகின்றார்.இவரது மகள் சந்தியா (21). இவருக்கும் கோவை கணபதி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (27) என்பவருக்கும் திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு சந்தியா, வினோத்குமார் ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 8-ந் தேதி கோவையில் இருந்து கரூர் அழைத்து சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சந்தியா சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் வெள்ளகோவிலில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சந்தியாவின் பெற்றோர் ஓட்டலுக்குசென்று விட்டனர். இதனால் சந்தியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு மதியம் பெற்றோர் வந்து பார்க்கும் போது ஜன்னல் கம்பியில் சேலையால் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சந்தியாவை மீட்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தியாவுக்கு திருமணமாகி 5 மாதம் மட்டுமே ஆவதால் தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்