search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suddenly magical"

    • கடிதம் எழுதி வைத்து புதுப்பெண் திடீர் மாயமானார்.
    • ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்ன கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது27). இவருக்கும், முகல்யா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி ஊர் திருவிழாவுக்கு மனைவியை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது முகல்யா மாயமானார்.

    அப்போது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், "என்னை தேட வேண்டாம், மன்னித்து விடுங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டி, காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள கீழ திருத்தங்கல், திருவள்ளு வர் காலனியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவரது மகள் லூர்து மேரி(வயது19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சுழி குரவை குளத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் இளம்பெண் திடீர் மாயமானார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் யசோதா (வயது 43). இவர் ராமநாதபுரம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (வயது21).

    தினந்தோறும் வேலைக்குச் சென்று விடுவதால் மகள் அபிநயா வீட்டில் தனியாக இருப்பதை யசோதா விரும்பவில்லை. இதனால் பாரதிநகரில் இருக்கும் தனது தாய் வீட்டில் மகளை விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    நேற்று காலையிலும் வழக்கம் போல் தனது தாய் வீட்டில் மகளை விட்டுவிட்டு யசோதா வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை என்று யாசோதாவுக்கு அவரது தாய் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தில் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    ×