search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் திடீர் மாயம்
    X

    இளம்பெண் திடீர் மாயம்

    • ராமநாதபுரத்தில் இளம்பெண் திடீர் மாயமானார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் யசோதா (வயது 43). இவர் ராமநாதபுரம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (வயது21).

    தினந்தோறும் வேலைக்குச் சென்று விடுவதால் மகள் அபிநயா வீட்டில் தனியாக இருப்பதை யசோதா விரும்பவில்லை. இதனால் பாரதிநகரில் இருக்கும் தனது தாய் வீட்டில் மகளை விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    நேற்று காலையிலும் வழக்கம் போல் தனது தாய் வீட்டில் மகளை விட்டுவிட்டு யசோதா வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை என்று யாசோதாவுக்கு அவரது தாய் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தில் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×