search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Coast Guard"

    • குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    • மும்பை வழியாக பயணித்த சீன கப்பலிலிருந்து உதவி கோரி இந்த மையத்திற்கு ஒரு செய்தி வந்தது
    • அன்றிரவு முழுவதும் வானிலை சாதகமாக இல்லை

    இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்பு 1977ல் தொடங்கப்பட்டது.

    இப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது மும்பையிலுள்ள கடற்சார் மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையம் (Mumbai Rescue Coordination Centre).

    அரபிக்கடலில் மும்பை வழியாக பயணித்த எம்வி டாங் ஃபேங் கான் டான் நம்பர் 2 (MV Dong Fang Kan Tan No 2) எனும் சீன ஆராய்ச்சி கப்பலிலிருந்து இவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த கப்பல் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கும் போது இன் வெய்க்யாங் (Yin Weigyang) எனும் ஒரு மாலுமிக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியுடன் கூடிய மாரடைப்பு ஏற்பட்டது.

    இதனால் அவருக்கு உடனடி மருத்துவ உதவி வேண்டி, அக்கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டது.

    அந்த சீன கப்பல், அரபிக்கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. முழு இருளில் இருந்த அன்றிரவு முழுவதும் வானிலையும் சாதகமாக இல்லை.

    இருப்பினும் அந்த பயணியை காக்க இந்திய கடலோர காவல்படை தீவிரம் காட்டியது. இதனைத்தொடர்ந்து, மும்பையிலுள்ள மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையத்தை சேர்ந்த நிபுணர்கள், நேரத்தை வீணாக்காமல் அவரை காப்பாற்ற வான்வழியாக விரைந்தனர்.

    ஸிஜி ஏஎல்ஹெச் எம்கே-3 (CG ALH MK-III)எனும் ஹெலிகாப்டரில் கப்பலுக்கு விரைந்து சென்று அவரை கப்பலிலிருந்து தூக்கி அவசரகால மருத்துவ உதவிகளை செய்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டியதும் அவரை மீண்டும் அந்த கப்பலின் மருத்துவ நிர்வாக முகவரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த பேருதவிக்கு சீனா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    "நாங்கள் காக்கிறோம்" (We Protect) எனும் குறிக்கோளுடன் செயலாற்றும் இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சவாலான வானிலையில் கடும் இருள் சூழ்ந்த இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த வீடியோவுடன் வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

    சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தாலும் ஆபத்தான நேரங்களில் உதவி செய்யும் நண்பனாக வாழும் இந்தியர்களின் பண்பை இது பறைசாற்றுவதாக வைரலாகும் வீடியோவை காண்பவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.


    • வேகமாக சென்ற படகை துரத்தி பிடித்து சோதனை.
    • கைப்பற்றப்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ராமேஸ்வரம் அருகே கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை அவர்கள் தடுத்தி நிறுத்த முயன்றனர். ஆனால் அதிவேகமாக சென்ற அந்த படகை துரத்தி சென்ற கடலோர காவல்படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 


    அந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ எடையுள்ள கஞ்சாவும், 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த படகில் இருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெயின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    • இந்திய கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து ரோந்து பணி.
    • பாகிஸ்தான் படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர்.

    அகமதாபாத்:

    போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படையும், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டது. நேற்றிரவு பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று, சந்தேகத்திற்கிடமான வகையில் குஜராத் அருகே கடற் பகுதிக்குள் வந்தது. இதையடுத்து இரண்டு ரோந்து கப்பல்கள் மூலம் அங்கு விரைந்த இந்திய கடலோர காவல் படையினர் அந்த படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர்.  


    இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் 40 கிலோ கிராம் எடையுள்ள போதை பொருளை அவர்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர் மேல் விசாரணைக்காக அந்த படகை ஜக்காவுக்கு கொண்டு சென்றனர்.

    • கடல் கொந்தளிப்பில் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • மீட்கப்பட்ட 32 பங்களாதேஷ் மீனவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு

    கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது, சிக்கிக் கொள்ளும் மீனவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து இந்திய கடலோரக் காவல் படை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 19 மற்றும் 20 ந் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே கடலில் பங்களாதேஷ் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடலில் தத்தளித்தவர்களில் 27 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.

    மேலும் 5 பேரை இந்திய மீனவர்கள் காப்பாற்றினர். மீட்கப்பட்ட 32 பங்களாதேஷ் மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் சர்வதேச எல்லையில், பங்களாதேஷ் கடலோரக் காவல் படையிடம் இந்திய கடலோ காவல்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் தாஜுதீன் கப்பல் மூலம் பங்களாதேஷிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
    • இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது.

    போர்பந்தர்:

    முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.

    குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை தாங்கினார். ராணுவம் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

    இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்துள்ளது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதில் 4 ஹெலிகாப்டர்கள் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு ஆகிய துறைகளில் கடலோர காவல்படை சுயசார்பை அடைந்ததை இது எடுத்துக்காட்டுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த மீன்பிடி படகை கடலோர பாதுகாப்பு படையினர் சிறைப்பிடித்து, அதில் இருந்த 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    கட்ச்:

    இந்திய கடலோர காவல் படையினர் இன்று சர்வதேச கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மீன்பிடி படகு, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததை கவனித்தனர்.



    உடனடியாக அந்த மீன்பிடி படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். படகை சோதனையிட்டபோது, அதில் 194 பாக்கெட்டுகளில் ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களையும் படகையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். படகில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
    இந்திய காவல்படைக்கு வருகிற 2023-ம் ஆண்டுக்குள் 200 கப்பல்களையும், 100 விமானங்களையும் பெற்று இருக்கும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடலோர காவல்படை நிலையம் அமைந்து உள்ளது. இந்த நிலையம், இந்தியாவின் 16வது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மாலை கடலோர காவல்படை அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் பரமேஷ் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கடலோர காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து கடலோர காவல்படை புதிய மாவட்ட தலைமையகத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்காக கடலோர காவல்படை 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று சிறந்த பாதுகாப்பு படையாக மாறி உள்ளது. இதில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தொழில்நுட்பங்கள் அடங்கிய கப்பல்கள் உள்ளன. இந்திய கடலோர காவல்படையில் கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவற்றின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இந்தியா சர்வதேச கடல்வழிப்பாதையில் நடுவில் அமைந்து உள்ளது. கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் நம் கடல் பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தியாவின் வாணிபத்தில் 95 சதவீதம் கடல்வழியாக நடக்கிறது.

    இந்திய கடலோர காவல்படை உலகில் 4-வது பெரிய கடலோர காவல்படை ஆகும். இங்கு 139 கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன. இந்த படை 2023-ம் ஆண்டில் 200 கப்பல்களையும், 100 விமானங்களையும் பெற்று இருக்கும்.

    தீவிர மீட்பு பணிக்காக அரசு தூத்துக்குடியில் உள்ள கடல்சார் மீட்பு துணை மையத்தை, கடல்சார் மீட்பு துணை மையமாக தரம் உயர்த்தி உள்ளது. நாட்டின் பலம், பாதுகாப்பு படையின் பலத்துடன் இணைக்கப்பட்டது. ஆகையால் பாதுகாப்பு படையினருக்கான தேவைகளை முன்னுரிமை அளித்து செய்வது நமது முக்கிய தேவை ஆகும். சமீபத்தில் நடந்த கஜா புயல் தாக்குதலின் போது, 74 கப்பல் மற்றும் 10 விமானங்கள் மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனால் மீனவர்கள் இழப்பு தடுக்கப்பட்டது. புயல் தாக்கத்துக்கு பிறகு கடலோர காவல்படையினர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண பொருட்கள் கொடுத்தனர். கடலோர காவல்படை தொடங்கப்பட்ட பிறகு அவர்களின் சிறப்பான செயல்பாடுகாரணமாக இந்தியாவில் இதுவரை 9 ஆயிரத்து 193 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

    இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் கடல் சூழலியலை பாதுகாக்க அண்டை நாடுகளான வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதற்காக இந்தியா, தெற்காசிய கூட்டு சுற்றுச்சூழல் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் ரசாயனம் மற்றும் எண்ணை மாசு ஏற்பட்டால், அதனை அகற்றுவதற்கு வழிவகை செய்து உள்ளது. இந்த மண்டல எண்ணெய் மாசு கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை இந்திய கடலோர காவல்படை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BanwarilalPurohit
    விசைப்படகில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தத்தளித்த 13 தமிழக மீனவர்களை கடலோர காவல் படை இன்று கரைசேர்த்தது. #TamilNaduBoatRescue #IndianCoastGaurd #GajaCyclone
    கன்னியாகுமரி:

    வங்கக் கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை மறுநாள் கடலூருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதற்கிடையே கன்னியாகுமரி மீனவர்கள் உள்ளிட்ட 13 மீனவர்கள் சென்ற விசைப்படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் அனைவரும் தத்தளித்தனர்.

    மீனவர்கள் கரை திரும்பாதது பற்றி தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களைத் தேடினர்.



    இந்நிலையில் நடுக்கடலில் தத்தளித்த தமிழக விசைப்படகை இந்திய கடல் பகுதியில் இருந்து 220 நாட்டிகல் மைல் தொலைவில் கடலோர காவல் படை இன்று கண்டுபிடித்தது. பின்னர் கடலோர காவல் படை கப்பல் உதவியுடன், அந்த விசைப்படகு லட்சத்தீவில் கரைசேர்க்கப்பட்டது. மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினர். #TamilNaduBoatRescue #IndianCoastGaurd #GajaCyclone
    ×